செய்தி தொடர்பாளர் மனைவி தற்கொலை விவகாரத்தில் துப்பு துலக்கிய போலீஸ்! நடந்தது என்ன?

0
72
Police find out about spokesperson's wife's suicide what happened?
Police find out about spokesperson's wife's suicide what happened?

செய்தி தொடர்பாளர் மனைவி தற்கொலை விவகாரத்தில் துப்பு துலக்கிய போலீஸ்! நடந்தது என்ன?

நேற்றே வெளியான இந்த செய்தியில் தற்கொலை என மட்டுமே தெரிந்தது அதற்கான காரணம் நேற்று தமிழன் பிரசன்னாவிடம் கேட்டு அறிந்தனர்.

அவரவர்களுக்கு ஆயிரம் பிரச்சனை. இந்த இக்கட்டான கால நிலையில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய்க்கு இந்த விஷயம் கூடவா தெரியாது. இந்த வருடம் பிறந்தநாளை கொண்டாட வில்லை என்றால் என்ன? அடுத்த வருடம் கொண்டாடி விட வேண்டியதுதான். இந்த சின்ன விசயத்திற்காக 1 வயது குழந்தையை தவிக்கவிட்டு தூக்கில் தொங்கி உள்ளார் என்றால் எவ்வளவு கல் நெஞ்சக்காரியாக இருப்பாள்.

மற்றொரு விதத்தில் என் செய்தார் என்று யோசித்து பார்த்தால், அவர் என்ன மன உளைச்சலில் இருந்தாரோ? என்னவோ? ஆனால் இதை மேலும் விசாரித்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும்.

இறக்கும் தருணம் எப்போது என்பது யாராலும் சொல்ல முடியாது. விதி முடிந்தால் செல்ல வேண்டியதுதான்.

கொடுங்கையூர் அடுத்த எருக்கஞ்சேரி மேற்கு இந்திரா நகரை சேர்ந்தவர் தமிழன் பிரசன்னா (வயது 43). இவர் தி.மு.க. கட்சியின் மாநில செய்தி தொடர்பு இணை செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி நதியா (35). இந்த தம்பதிக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆன நிலையில், இவர்களுக்கு ஏஞ்சல் பாரதி, ஜெனிபர் பாரதி ஆகிய 2 மகளும், தமிழ் நிரன் என்ற 1 வயது மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் நதியாவுக்கு நேற்று பிறந்தநாள் என்பதால், பிறந்தநாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டும் என்று கணவர் பிரசன்னாவிடம் தெரிவித்ததாக தெரிகிறது. மேலும் பிறந்த நாள் கொண்டாட்டத்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட வேண்டும் எனவும் அவர் கூறியதாக தெரிகிறது.

அதற்கு தமிழன் பிரசன்னா தான் கட்சி பொறுப்பில் இருப்பதால், ஊரடங்கு நேரத்தில் ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்க்குமாறு மனைவியிடம் கூறியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட நதியா நேற்று காலை கணவர் குளியல் அறைக்கு சென்ற நிலையில், படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தனது புடவையால் தூக்கிட்டுள்ளார்.பிறந்த நாள் அன்றே இப்படி செய்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்த நிலையில் குளியல் அறையில் இருந்து வெளியே வந்ததும், நதியா தூக்கில் தொங்கி துடிதுடிப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிரசன்னா அவரை மீட்டு, காரில் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

அப்போது அங்கு நதியாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.