அதிகாலை டெல்லி என்கவுண்டர்: சுட்டுக் கொல்லப்பட்ட இருவர் யார்?

0
70

டெல்லியில் இன்று அதிகாலை 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

டெல்லியில் உள்ள பிரகலாதபூர் என்ற பகுதியில் ராஜா குரேஷி, ரமேஷ் பகதூர் ஆகிய 2 பேர் இன்று அதிகாலை சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த இரண்டு பேரும் கடந்த சில வருடங்களாக பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ளதாகவும் அவர்கள் மீது பல வழக்குகள் அடிப்படையில் எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளதாகவும், போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்து வந்த இவர்கள் இருவரும் இன்று அதிகாலை பிரகலாதபூர் என்ற பகுதியில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாகவும் இதனை அடுத்து அங்கு சென்ற போலீஸ் படை இருவரையும் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த என்கவுண்டர் குறித்த விரிவான தகவலை போலீசார் இன்னும் சில நிமிடங்களில் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஐதரபாத்தில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில் தற்போது மீண்டும் ஒரு என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

author avatar
CineDesk