நெஞ்சு வலியால் துடித்த காவலர்! உயிர்காக்க உதவிய சமூக வலைதளம்; காவலர் மனைவி கண்ணீர் விட்டு நன்றி!!

0
192

நெஞ்சு வலியால் துடித்த காவலர்! உயிர்காக்க உதவிய சமூக வலைதளம்; காவலர் மனைவி கண்ணீர் விட்டு நன்றி!!

கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதி காவல் நிலையத்தில் முதுநிலை காவலராக மனோகரன் பணிபுரிந்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதி இரவு பணியில் காவலர் மனோகர் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வலியில் துடித்த மனோகரை சக காவலர்கள் கடலூர் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பாண்டிச்சேரி கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர். இந்த தகவல் மனோகரன் குடும்பத்திற்கு அவசர தகவலாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், காவலர் மனோகரன் பாண்டிச்சேரி மருத்துவமனையில் அவசர சிகிச்சையில் சேர்க்கப்பட்டார். உடலை பரிசோதித்த பின்பு ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், அவசர சிகிச்சைக்கு 1.5 லட்சம் செலவாகும் என்று கூறினர். காவலரின் மனைவியால் உடனடியாக ஒன்றரை லட்சத்தை திரட்ட முடியாமல் தவித்தார்.

இந்த அவசர தகவல் கடலூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி அவர்களிடமும், கடலூர் முதுநகர் ஆய்வாளர் பால்சுதர், உதவி ஆய்வாளர் ஆகாசமூர்த்தி, கடலூர் புதுநகர் காவலர்களுக்கும் மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து காவலர்களின் முகநூல் குழுக்களிலும் வங்கி எண் தகவலுடன் பண உதவி கேட்டு அவசர தகவலாக பகிரப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்த காவலர்களின் மூலம் இணையத்தின் மூலமாகவும், நேரடியாகவும் 1 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் திரட்டப்பட்டது.

திரட்டப்பட்ட தொகையை துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று மனோகரனின் மனைவியிடம் ஒப்படைத்தார். கணவனின் மருத்துவ செலவிற்காக உதவி செய்த காவலர்களுக்கு மனோகரனின் மனைவி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். சிகிச்சை முடிந்து காவலர் மனோகரன் நல்ல நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவசர நேரத்தில் உதவி புரிய சமூக வலைதளங்களில் பதிய உத்தரவிட்ட டிஎஸ்பி சாந்தி அவர்களுக்கும், பிற காவலர்களுக்கும் இணையத்தில் பாராட்டுகள் குவிந்த வருகிறது. அவசர காலங்களில் எப்படி உதவ வேண்டும் என்பதற்கு காவல்துறையினரின் செயல்பாடு உதாரணமாக அமைந்துள்ளது.

author avatar
Jayachandiran

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here