காயத்துடன் தவித்தவருக்கு கடவுள்போல உதவிய காவலர்! மனதை நெகிழவைத்த புதுச்சேரி சம்பவம்..!!

0
88

காயத்துடன் தவித்தவருக்கு கடவுள்போல உதவிய காவலர்! மனதை நெகிழவைத்த புதுச்சேரி சம்பவம்..!!

புதுச்சேரி அண்ணா நகர் பகுதியில் காரில் வந்த மர்ம நபர்கள் வயதான ஒருவரை காயத்துடன் சாலை ஓரமாக இறக்கி விட்டதாக, புதுச்சேரி உருளையன்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. இந்த தகவலை அடுத்து மோகன் என்ற காவலர் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

சம்பவ இடத்தில் ஒரு பெரியவர் உடலில் காயங்களுடன் சோர்ந்து பேசமுடியாத அளவிற்கு உட்கார்ந்திருந்தார். இதனை கண்ட காவலர் மோகன் அவரிடம் விசாரிக்க ஆரம்பித்தார். முதியவரால் பேச முடியாமல் பசியால் தவிப்பதை மோகனால் உணர முடிந்தது. இதனையடுத்து உணவு வாங்கி வந்து அவரே ஊட்டிவிட்டார். பின்னர் முதியவரை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தார். முதியவரிடம் எந்த பதிலும் வெளி வந்ததாக தெரியவில்லை.

இந்நிலையில், முதியவரின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை தேவைகளை கருத்தில் கொண்டு முதியோர் இல்லத்தில் சேர்த்துள்ளார். யார் ஒருவருக்கு தானே உணவு ஊட்டிய சம்பவம் மனதை நெகிழ வைத்துள்ளது. சமூகத்தின் மேல் பொறுப்புள்ள ஒரு காவலராக செயல்பட்ட மோகன் அவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர். முதியவர்களை வீட்டைவிட்டு விரட்டுவதும் அவர்களை புறக்கணிப்பதும் சமீப காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

author avatar
Jayachandiran