நெல்லை அருகே சரமாரியாக வெட்டிய இரண்டு வாலிபரை கைது செய்த போலீஸ்!! பகீர் திருப்பம்?

0
213
Police arrested two youths who slashed near Nella!! Bagheer turn?
Police arrested two youths who slashed near Nella!! Bagheer turn?

நெல்லை அருகே சரமாரியாக வெட்டிய இரண்டு வாலிபரை கைது செய்த போலீஸ்!! பகீர் திருப்பம்?

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேவுள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சுந்தரபாண்டி. இவரது மகன் தான் சாமிதுரை இவருடைய வயது 23.இவர் நேற்று சுந்தரபாண்டி நெல்லைக்கு சென்று விட்டு பேருந்தில் நள்ளிரவில் நாங்குநேரி தாலுகா அலுவலகம் பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கினார். அவரை சாமிதுரை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று வீட்டில் விட்டுள்ளார்.

பின்னர் அவரது வீட்டின் எதிரேவுள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று சாமிதுரை செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று திடீரென்று கண்ணிமைக்கும் நேரத்தில் சாமிதுரையை சரமாரியாக வெட்டி சாய்த்தது.பின்னர் அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதற்கிடையே சாமிதுறையின் அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர்கள் ஓடி வந்தனர்.

அப்போது சாமிதுரை இரத்த வெள்ளத்தில் சரமாரியாக வெட்டப்பட்டு கீழே இறந்து கிடந்தார். இதனைத் தொடர்ந்து நாங்குநேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அத்துடன் மோப்ப நாயையும் அழைத்து வந்தனர். மோப்பநாயின் உதவியோடு அந்த கும்பலை தேடிச் சென்றனர். சிறிது தூரம் சென்ற பிறகு மோப்பநாய் நின்று விட்டது.

இதனையடுத்து சாமி துறையின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.விசாரணையின் மூலம் கடந்த 2019 ஆம் ஆண்டு கோதைசேரியில் நடந்த ஒரு கொலை வழக்கில் சாமி துறைக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

எனவே அந்த வழக்கு காரணமாக பழிக்கு பழிவாங்கும் என்ற நோக்கில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தனி படைகள் அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார் பல கோணத்திலும் மற்றும் வெவ்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக கோதைசேரியைச் சேர்ந்த முருகேசன் மற்றும் திசையன்விளையை சேர்ந்த விக்டர் ஆகிய இரண்டு பேர் தாதாபுரம் கோர்ட்டில் சரணடைந்துள்ளனர். அவர்கள் ரெண்டு பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கும் போது கொலை தொடர்பான முழு விவரங்களும் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு  நிலவி வருகிறது.

author avatar
Parthipan K