கணவருக்கு விஷ ஊசி! மனைவி மற்றும் கள்ளக்காதலன் உட்பட 6 பேர் கைது

0
78

கணவருக்கு விஷ ஊசி! மனைவி மற்றும் கள்ளக்காதலன் உட்பட 6 பேர் கைது

ஆந்திர மாநிலம், சித்தகானி பகுதியை சேர்ந்தவர் ஷேக் ஜமால் சாயபு, மனைவி ஷேக் இமாம் பீ. இவர்களுக்கு 2 மகள்கள், இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இமாம் பீ அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மோகன் ராவ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இமாம் பீ, மோகன் ராவு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டிருந்தனர். இருவரும் வீட்டில் ஒன்றாக இருந்தபோது அவரது கணவர் ஷேக் ஜமால் சாயபு பார்த்துவிட்டார். ஆத்திரமடைந்த அவர் மனைவியை கண்டித்துள்ளார், இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது.

கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்துக்கட்ட வேண்டும் என மோகனிடம் இமாம் பீ தெரிவித்தார். இதனையடுத்து அவர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் ரூ.3500 கொடுத்து 2 ஊசிகளை வாங்கி வாங்கியுள்ளனர்.

இமாம் பீயிடம் ஒரு ஊசியும், மோகனிடம் ஒரு ஊசியும் எடுத்து கொண்டனர். இமாம் தன் கணவருக்கு விஷ ஊசி போட முடியாமல் போனது, இதையடுத்து இமாம் மகள் வீட்டிற்கு சென்றார், அங்கிருந்து கணவருக்கு போன் செய்து நாளை மகள் வீட்டிலிருந்து தன்னை அழைத்துச் செல்லுமாறு கூறிள்ளார். மோகனிடம் தெரிவித்த இமாம் அவர் வரும்போது லிப்ட் கேட்டு பைக்கில் ஏறி விஷ ஊசி போட்டு கொல்ல வேண்டும் என திட்டமிட்டுள்ளார்.

மோகன்ராவின் நண்பர்களான வெங்கண்ணா, வெங்கடேஷ், யஸ்வந்த் சாம்பசிவ ராவ் ஆகியோர் சேர்ந்து மதிகொண்ட மண்டலம் அருகே பைக்கில் காத்துக்கொண்டிருந்து அவ்வழியாக வந்த ஜமால் பைக்கை நிறுத்தி லிப்டு கேட்டு வெங்கடேஷ் பைக்கில் ஏறிக்கொண்டார். செல்லும் வழியில், ஜமால் சாயபுக்கு இடுப்பில் விஷ ஊசியை போட்டு விட்டு வெங்கடேஷ் தப்பிச் சென்றார்.

அங்கிருந்தவர்கள்  ஆம்புலன்சுக்கு ஃபோன் செய்தனர். அதற்குள் ஷேக் ஜமால் சாயபு பரிதாபமாக துடிதுடித்து இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் இமாம் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது அவர் அடிக்கடி மோகன் ராவிடம் பேசியது தெரிய வந்தது.

இதையடுத்து இமாம், அவரது கள்ளக்காதலன் மோகன் ராவ், அவரது நண்பர்கள் வெங்கண்ணா, வெங்கடேஷ், யஸ்வந்த், சாம்பசிவ ராவ் ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது இதனை தொடர்ந்து 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K