69 ஆயிரம் தமிழர்களை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரும் பா.ம.க!

0
74

வந்தே பாரத திட்டத்தின் கீழ் அதிக அளவு வளைகுடா நாடுகளில் சிறப்பு விமானங்களை இயக்கி வெளிநாடு வாழ் தமிழர்களை தமிழர்கள் தமிழகத்திற்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை வேண்டும் என்று ராமதாசு கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”கொரோனா அச்சம் காரணமாக தாயகம் திரும்ப விண்ணப்பித்த வெளிநாடுவாழ் தமிழர்களின் பாதி பேர் மட்டும் தான் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட இருப்பதாகவும் இன்னும் 68 ஆயிரம் பேர் அழைத்து வரப்பட வில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.தமிழ்நாடு திரும்ப விண்ணப்பித்து நான்கு மாதங்கள் ஆகியும் அவர்கள் அழைத்துவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதது  வேதனை அளிக்கிறது.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தாயகம் திரும்ப விரும்பியவர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து தமிழ் நாடு திரும்புவதற்கு விண்ணப்பம் அளித்து இருந்தனர்.

ஒட்டுமொத்தமாக 1.48 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் கடந்த 4 மாதங்களில் 79 ஆயிரம் தமிழர்கள் மட்டுமே தமிழ் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.மீதமுள்ள சுமார் 69 ஆயிரம் தமிழர்கள் சிங்கப்பூர், துபாய் ,சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் தனிமை முகாம்களில் வாடி வருகின்றனர்.நாடாளுமன்ற மக்களவையில் வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் இத்தகவலை தெரிவித்திருக்கிறார். 

துபாய்,சார்ஜா உள்ளிட்ட பிராந்தியங்களை உள்ளடக்கிய ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து மட்டும் தாயகம் திரும்ப 66 ஆயிரத்து 267 பேர் விண்ணப்பித்த நிலையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் அதாவது 25 ஆயிரத்து 572 பேர் மட்டும் தான் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.மீதமுள்ள 40 ஆயிரத்திற்கும் கூடுதலானவர்கள் இன்னும் தாயகம் திரும்ப முடியவில்லை. அவர்கள் எப்போது தமிழகத்திற்கு விமானத்தில் அழைத்து வரப்படுவார்கள் என்பது குறித்த விவரங்களும் இன்றுவரை அறிவிக்கப்படவில்லை.

சிங்கப்பூரில் சுமார் 7 ஆயிரம் பேர் சவுதி அரேபியாவில் சுமார் 7500 பேர் கத்தாரில் சுமார் 1000 பேர் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.ஓமன், பஹ்ரைன், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் அதிகபட்சமாக 2,000 பேர் வரை வாடிக் கொண்டிருக்கின்றனர். உலகின் அனைத்து நாடுகளும்வரப்படுவார்கள் பிற நாடுகளில் தங்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை அதிகபட்சமாக இரு மாதங்களில் சொந்த ஊர்களுக்கு அழைத்துச் சென்று விட்டன. இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்த வெளிநாட்டு இந்தியர்கள் கிட்டத்தட்ட தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் இன்னும் அழைத்து வரவில்லை.தமிழர் விஷயத்தில் மட்டும் பாகுபாடு காட்டுவது நியாயம் கிடையாது. கொரோனா அச்சம் காரணமாக தாயகம் திரும்ப விண்ணப்பித்தவர்கள் எவரும் வசதியானவர்கள் அல்ல. அனைவருமே வாழ்வாதாரம் ஈட்டுவதற்காக பிழைப்பு தேடி சென்றவர்கள். கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கிய நிலையில் அவர்கள் அனைவருமே வேலை இழந்து விட்டனர். எந்த வருமானமும் இல்லாமல் பாடுபவர்களை 4 மாதங்களாக வெளிநாட்டில் தனிமை முகாமில் தவிக்கவிடுவது எந்த வகையிலும் அறம் இல்லை. 

வெளிநாடுகளில் தவிப்பவர்கள் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பவர்களுக்கு மட்டும் அந்த நாடுகளில் நாடுகளின் விதிகளுக்குட்பட்டு உணவு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.முகாம்களுக்கு வெளியில் இருப்பவர்கள் உணவுக்கு கூட வழியில்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். மற்றொரு புறம் தமிழகத்தில் உள்ள அவர்களின் குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரத்தில் வாடி கொண்டுள்ளனர்.

வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் 69 ஆயிரம் பேரில் 90 விழுக்காடு வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.அந்த நாடுகளும் தமிழகத்துக்குமான வான் பயண நேரம் சுமார் 3 மணி நேரம் மட்டும் தான்.மத்திய அரசு நினைத்தால் அதிகபட்சமாக மூன்று நாட்க்குள் அனைத்து தமிழர்களையும் தமிழகத்திற்கு அழைத்து வர முடியும்.

தமிழ்நாட்டில் கொரோனவைரஸ் கட்டுக்குள் வரத் தொடங்கி உள்ள நிலையில் வெளிநாடு வாழ் தமிழ் மக்களை அழைத்து வருவதால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடாது எனவே வந்தே பாரத இயக்கத்தின் கீழ் அதிக அளவு வளைகுடா நாடுகளுக்கு சிறப்பு விமானங்களை இயக்கி வெளிநாடு வாழ் தமிழர்களை தமிழகத்திற்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசும் இதை வலியுறுத்த வேண்டும்.” என்று கூறியுள்ளார்

author avatar
Parthipan K