அன்புமணி ராமதாஸிடம் ஆலோசனை பெறும் பிரதமர் : கொரோனாவை தடுக்க அதிரடி திட்டம்!

0
86

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார்.

இந்தியாவில் நோய் தொற்று ஏற்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 4,288 ஆக உயர்ந்துள்ளது. அதில் சிகிச்சை பெற்று 328 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை பலியானோர் மொத்த எண்ணிக்கை 109 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ராஜ்யசபா எம்பி அன்புமணி ராமதாஸ் கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி பாராளுமன்றத்தில் வைரஸின் ஆபத்தை உணர்த்தும் விதமாக பேசியுள்ளார். அவர் மாநிலங்கள் அவையில் பேசி அந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று மாலை ராஜ்யசபா எம்பி மற்றும் பாமக இளைஞரணி செயலாளர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இடம் தொலைபேசியில் உரையாடியுள்ளார். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ் துடிப்புடன் செயல்பட்டதால் அவரிடம் சில ஆலோசனைகளை பிரதமர் கேட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த உரையாடலின் போது பிரதமரின் செயல்களை பாராட்டியதாகவும், மேலும் நோய் பரவல் அதிகமாக இருப்பதால் அதன் தாக்கம் கட்டுக்குள் வரும்வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் படியும் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி பிரதமர் கேட்ட கொண்டதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.

author avatar
Parthipan K