தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா அப்படி யென்றால் இந்த 4 வழியை அவசியம் பின்பற்றுங்கள்!

0
56

தற்போதுள்ள காலகட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சிறந்த வழியாக தங்கம் இருந்துவருகிறது. விலைமதிப்பற்ற உலோகத்தின் விலை உயரும்போது மற்ற பத்திரங்களின் மதிப்பு குறைகிறது.

பங்குகள் மிகவும் நம்பிக்கையற்றவையாக இருக்கும்போது தங்கம் நன்றாக செயல்படும் என்பது வரலாற்று ரீதியாக சாட்சியாக இருக்கிறது. இதனை கருத்தில் வைத்து தான் பலரும் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகிறார்கள்.

சரிந்து வரும் பங்குச்சந்தையில் மற்றும் வெளிநாட்டு நாணயத்தில் எழுச்சிக்கு இடையே முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை தங்கத்தின் பக்கம் திருப்பி வருகிறார்கள். அதற்கு ஏற்ப தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் உயர்வை சந்தித்து வருகிறது.

தற்போதெல்லாம் தங்கத்தில் முதலீடு செய்ததற்கு பல்வேறு முறைகள் இருந்து வருகின்றன. தங்க முதலீட்டில் 4 பிரபலங்களான தங்க நகைகள், கோல்டு எக்ஸ்சேஞ்ச், ட்ரேடட்ஃபண்ட், தங்க பத்திரங்கள் மற்றும் டிஜிட்டல் தங்கம் உள்ளிட்டவை தொடர்பாக இனி தெரிந்துகொள்ளலாம்.

தங்க நகைகள்

பெரும்பாலான தங்கம் வாங்குவோர் இன்னும் அதனை நகைகளாக வாங்கி விருப்பம் கொண்டிருக்கிறார்கள். நகைகளை பொறுத்தவரையில் அவ்வளவு விலைமதிப்பற்ற தேர்தலாக கருதப்படுவதில்லை. ஏனென்றால் அவை அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் செலவு மற்றும் மதிப்பையும் இணைத்துக் கொள்ள வேண்டும். நாட்டில் தங்கத்தை நகைகளாக வாங்குவது என்பது முதலீடு தொடர்பான விஷயமாக இல்லாமல் அது உணர்வுபூர்வமான மதிப்பாகவும் இருந்துவருகிறது.

கோல்டு எக்சேஞ்ச் டிரேடட் பண்ட்

கோல் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் என்பது காகிதம் அல்லது டிமிட் வடிவத்தில் தங்கத்தை குறிக்கும் அலகுகள் என சொல்லப்படுகிறது. தங்கத்தை உள்ளடக்கிய பங்குகளை போலவே கோல்ட் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்ட்களும் டிமேட் கணக்கு மூலமாக இதில் வர்த்தகம் செய்து கொள்ளலாம்.

தாங்கள் இதில் 1 கிராம் தங்கத்தில் கூட முதலீடு செய்யலாம். கோல்டு எக்ஸ்சேஞ்ச் ட்ரேடட் பண்டுகளில் முதலீடு செய்ய உங்களுடைய வர்த்தக கணக்கு அவசியமிருக்க வேண்டும்.

கோல்ட் எக்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் பொறுத்தவரையில் சேமிப்பு மற்றும் திருட்டு தொடர்பான விஷயங்களால் முதலீட்டாளர்கள் கவலைப்பட தேவையில்லை. நகைகள் வடிவில் இருக்கின்ற தங்கம் உள்ளிட்டவற்றில் அதனை செய்வதற்கான கட்டணங்கள் மற்றும் மற்ற தொடர்புடைய செலவுகள் இல்லாததால் இது குறைந்த செலவை கொண்டுள்ளதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

சாவேரின் தங்கப் பத்திரங்கள்

SGB பத்திரங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்படும் அரசு பத்திரங்கள் இவற்றை கிராம் தங்கத்தில் குறிக்கப்படுகின்றன. அதோடு இவை தங்க நகைகளுக்கு மாற்றாக கருதப்படுகின்றன. இந்த பத்திரம் முறையானது முதலீட்டாளர்கள் தங்கத்தை சொந்தமாக வைத்திருக்க அனுமதிக்கின்றன.

அதோடு அதன்மீது வட்டியை பெறவும், வழிசெய்கிறது. இவற்றை வாங்கும்போது இவற்றை வெளியீடு செய்ய விலையை பணமாக செலுத்த வேண்டும், அதோடு தங்கத்தின் தற்போதைய சந்தை விகிதத்தின் அடிப்படையில் மீட்டெடுப்பதற்கான கட்டணமும் பணமாக வழங்க வேண்டும்.

டிஜிட்டல் தங்கம் என்பது தங்க நகைகளாக வேண்டியது இல்லை என்பவர்களுக்கு ஏற்ற முதலீடு வழிமுறையாகும். இதில் முதலீடு செய்வதற்கான ஒரு மெய்நிகர் வழி நீங்கள் இணையதளம் மூலமாக பணம் அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனை மூலமாக டிஜிட்டல் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம்.

அதோடு விற்பனையாளர்கள் பரிவர்த்தனைக்கான டிஜிட்டல் இன்வோயிசை தங்களுக்கு வழங்குவார்கள். நீங்கள் டிஜிட்டல் தங்கத்தை வாங்கும் நிறுவனமானது அந்த தங்கத்தை அதன் பாதுகாப்பான முறையில் சேமிக்க வழி செய்கிறது.

டிஜிட்டல் தங்க முதலீட்டை 1 ரூபாயிலிருந்து தாங்கள் ஆரம்பிக்கலாம். உங்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் தங்கத்தை விற்கவும், வாங்கவும், முடியும். பெரும்பாலான தளங்களில் டிஜிட்டல் தங்க முதலீடுகளுக்கு 2 லட்சம் வரை வரம்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.