கனமழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கின்றதா என பாருங்கள்!

0
178
Places that are going to be washed by heavy rain! See if your town is on this list!
Places that are going to be washed by heavy rain! See if your town is on this list!

கனமழை வெளுத்து வாங்க போகும் இடங்கள்! உங்கள் ஊர் இந்த லிஸ்டில் இருக்கின்றதா என பாருங்கள்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகளும், போக்குவரத்து சேவைகளும் முற்றிலும் மூடப்பட்டிருந்தது.நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது.

ஆனால் தற்போது மழை அதிகளவு பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் பாதிப்படைய செய்கின்றது.கடந்த வாரம் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.அந்த புயலானது கரையை கடந்த நிலையில் தமிழகம்,காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அதிகளவு மழை பெய்தது.

அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர்.மேலும் அதனை தொடர்ந்து கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை அந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக பள்ளி வேலை நாளாக அறிவித்தனர்.

இந்நிலையில் தற்போது தெற்கு வங்கிக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.இது அடுத்த இரண்டு நாள்களில் இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அதனால் இன்று முதல் வரும் 21 ஆம் தேதி முதல் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.அதற்கு அடுத்த நாள் 22 ஆம் தேதி தமிழக கடலோர  மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களிலும், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அதனை தொடர்ந்து ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவள்ளூர், நாகை மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வரும் 23 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

author avatar
Parthipan K