மகளுக்கு நீதி கேட்க சென்ற தாயிற்கு நேர்ந்த பரிதாபம்! போலீசாரின் வெறி செயல்!

0
82
Pity what happened to the mother who went to seek justice for her daughter! Crazy action of the police!
Pity what happened to the mother who went to seek justice for her daughter! Crazy action of the police!

மகளுக்கு நீதி கேட்க சென்ற தாயிற்கு நேர்ந்த பரிதாபம்! போலீசாரின் வெறி செயல்!

உத்தர பிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மகளுக்கு நீதி கேட்டு அவரது தாயார் ஹாஜி ஷெரீப் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அப்போது அந்த பெண்ணை வழக்கு விவரம் பற்றி பேச வேண்டும் என கூறிவுள்ளனர். மேலும் காவல் நிலையத்தின் உயரதிகாரியான அனூப் மவுரியா என்பவர் தனது இல்லத்திற்கு வரும்படி கூறியுள்ளார்.

இதனை நம்பி பாதிக்கப்பட்ட மகளின் தாயார் உயரதிகாரியின் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் வேலியே பயிரை மேய்ந்தது போல் நீதி கேட்டு சென்ற இடத்தில் அனூப் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது அவரிடம் இருந்து தப்பி வந்துள்ளார். அங்கு அந்த பெண் நடந்த கொடுமைகளை பற்றி போலீசில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் உயரதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த பெண் அளித்த புகாரின்பேரில் அனூப் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட அனூப் மவுரியாவை போலீசார் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்துகின்றனர்.

author avatar
CineDesk