32 வயது பெண்ணுக்கு 17 சிறுவனால் ஏற்பட்ட பரிதாபம்! இந்த வயதில் இவ்வளவு வன்மமா?

0
87
Pity for a 32 year old girl by 17 boys! Is it so violent at this age?
Pity for a 32 year old girl by 17 boys! Is it so violent at this age?

32 வயது பெண்ணுக்கு 17 சிறுவனால் ஏற்பட்ட பரிதாபம்! இந்த வயதில் இவ்வளவு வன்மமா?

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இதெல்லாம் எப்போது தான் முடியும்? எல்லாருக்கும் ஏன் இவ்வளவு வன்மம்? எங்கிருந்து இதையெல்லாம் கற்றுக் கொள்கிறார்கள்? 10 வயது, பதினைந்து வயது, 17 வயதெல்லாம் ஒரு கொலை செய்யும் வயதா?

ஆனால் தற்போது பிடிபடும் கொலையாளிகள் அனைவரும் இந்த வயதிலேயே உள்ளனர். அதுவும் சட்டங்களை மாற்றி தண்டனைகளை கடுமையாக மாற்ற வேண்டும். எனவே அனைவரும் பல கோரிக்கைகளை விடுத்து உள்ளனர். அரசு இதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதுவும் தலைநகரில் இது போன்ற கொடூர கொலைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.

டெல்லியில் துவாரக பகுதியில் குப்பை தொட்டி ஒன்று உள்ளது. அதன் அருகே சாக்கடை ஒன்று உள்ளது. அந்த சாக்கடையில் பெண்ணின் உடல் ஒன்று துணியால் சுற்றப்பட்டு கிடந்தது. மேலும் இதுபற்றி தகவல் அறிந்து வந்த பொலிசார் அதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டன.

32 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் புகைப்படம் பல்வேறு வாட்ஸ் அப் எண்களிலும் பகிர்ந்து அதன் மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பெண்ணின் குடும்பத்தினருக்கும் அந்த பெண்ணின் புகைப்படம் பற்றிய தகவல்கள் சென்றடைந்தன. 2700 பேரிடம் விசாரணை நடைபெற்றது. பல இடங்களின் சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து கடந்த 17ம் தேதி 17 வயது சிறுவன் ஒருவனை கைது செய்துள்ளனர். அவனிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளும் போது பல திடுக்கிடும் படி அதிர்ச்சி தரும் தகவல்கள் மற்றும் உண்மைகள் வெளிவந்தன. அந்த சிறுவன் தனது வீட்டில் வைத்து அந்தப் பெண்ணின் கைகளை கட்டிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்து உள்ளான் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அதன்பிறகு போலீசாரிடம் சிக்கி விடக்கூடாது என்பதற்காக, அந்த பெண்ணை கொன்று பெண்ணின் பிறப்புறுப்பை எரித்து உள்ளான். அதன் பின்னர் உடலை சாக்கடையில் வீசி சென்றதும் விசாரணையின் மூலம் அவன் தெரிவித்துள்ளான். சிறுவனிடமிருந்து ஒரு மாருதி வேன், இரும்புக் குழாய், மண்ணெண்ணெய், எரிந்த துணிகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

போலீசார் இது குறித்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். நாட்டின் தலைநகரில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது, மக்களிடையே மிகவும் பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.