பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்! வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!

0
85

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

நாடு முழுவதும் நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது இதன் காரணமாக, மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாறுதல் செய்யப்படாமல் ஒரே நிலையில் தொடர்ந்தது. இந்த நிலையில், தற்சமயம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தற்சமயம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிகப்படுத்தி வருகிறார்கள்..

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பின் காரணமாக, ஒரு சில தினங்களுக்கு முன்பு பெட்ரோல் விலையில் மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் நேற்றைய தினம் பெட்ரோல் ஒரு லிட்டர் 99 ரூபாய் 20 காசுக்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 93 ரூபாய் 52 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது இந்த நிலையில், இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் அதே விலையில் நீடித்து வருகிறது.