மக்களே எச்சரிக்கை! ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்களின் மருந்துக்களுக்கு தடை! 

0
116
people-beware-ban-on-blood-pressure-and-diabetes-drugs
people-beware-ban-on-blood-pressure-and-diabetes-drugs

மக்களே எச்சரிக்கை! ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்களின் மருந்துக்களுக்கு தடை!

பிரபல யோகா பாபா ராம்தேவ் பதஞ்சலி என்று நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.இந்த நிறுவனம் தொடங்கிய காலகட்டத்தில் பெரும்பாலானோர் பதஞ்சலி மருந்து பொருட்களை தான் வாங்கி பயன்படுத்தி வந்தனர்.அதனையடுத்து தற்போது எண்ணற்ற புது புது நிறுவனங்கள் வந்ததால் மக்கள் நாளடைவில் அதனை மறந்து புதுமைக்கு மாறிவருகின்றனர்.

ஆனாலும் ஒருசிலர் தொடர்ந்து ஒரு நிறுவனத்தின் மருந்துக்களை பயன்படுத்த வேண்டும் என்று நினைத்து வருகின்றனர்.அந்த வகையில் தான் பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்களையும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் உத்தரகண்ட் ஆயுர்வேத மற்றும் யுனானி கட்டுப்பாட்டு இயக்குநரகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில் பதஞ்சலி நிறுவனத்திற்கு கீழ் இயங்கி வரும் திவ்யா பார்மசியின் மதுக்ரிட் ,ஐக்ரிட் ,தைரோகிரிட் பிபிகிரிட் மற்றும் லிப்பிடோம் ஆகிய ஐந்து மருந்துகளின் உற்பத்திக்கு தடை விதித்துள்ளது.இந்த ஐந்து மருந்துகளும் ரத்த அழுத்தம் ,நீரழிவு ,தைராய்டு,குளுக்கோமா எனும் கண் நோய் ,அதிக கொலஸ்ட்ரால் ஆகிய நோய்களுக்கு பயன்படுத்தும் மருந்தாகும்.

மேலும் இந்த மருந்துகளின் தயாரிப்பை மதிப்பாய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதல் கிடைக்கும்வரை ஐந்து மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்திற்கு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K