பேச்சிப்பாறை அருகே கால்வாயில் பரிதாபம்!

0
65

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மணியங்குடி அன்று முதல் இன்று வரை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் வயது 30 தேனீ வளர்க்கும் தொழிலான இவருடைய மனைவி மஞ்சு வயது 22 அமர்நாத் என்ற ஒரு வயது மகன் உள்ளார்.

நேற்று காலை அனிஷ் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மனைவி மற்றும் மகனுடன் காரில் குலசேகரம்  சென்றார். காரை அனீஷ்  ஓட்டிச்சென்றார் கார் மதியம் 12 30 மணியளவில் மதுரை அருகே கால்வாய் கரையோரம் உள்ள சாலையில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது உடனே காரை அனீஷ்  கட்டுப்படுத்த முயன்றார்  ஆனால் எதிர்பாராதவிதமாக கால்வாயில் கார் கவிழ்ந்தது கால்வாயில் அதிகளவில் முற்றிலுமாக மூழ்கியது.

காரின் கண்ணாடி முழுவதும் மூடப்பட்டு இருந்ததால் உள்ளே இருந்தவர்கள் வெளியே வரமுடியாமல் சிக்கிக்கொண்டனர் மேலும் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் உடனடியாக யாரும் உதவிக்கு வரவில்லை சிறிது நேரம் கடந்து அந்த வழியாக சென்றவர்கள் கால்வாயில் கார் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த உடனே கார் கண்ணாடிகளை உடைத்து உள்ளே இருந்த மூன்று பேரையும் மீட்டு வெளியே கொண்டுவந்தனர்.

அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மூன்று பேரும் ஏற்கனவே இறந்ததாகத் தெரிவித்தனர் பின்னர் அவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

author avatar
CineDesk