பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனை – ராமதாஸ் பரபரப்பு ட்வீட்!

0
163
#image_title

பாட்டாளி மக்கள் கட்சியின் சாதனை – ராமதாஸ் பரபரப்பு ட்வீட்!

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளை இனி தமிழிலும் எழுதலாம் என்ற அறிவிப்புக்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்து, வரவேற்றுள்ளார்.

இது குறித்து ராமதாஸ் அவர்கள் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அவர் கூறியதாவது :-

தமிழில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத் தேர்வுகள், பா.ம.க.வின் கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சி தமிழை மத்திய அலுவல் மொழியாக்க வேண்டும்.

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் (Staff Selection Commission – SSC) நடத்தும் பல்வகைப் பணியாளர் தேர்வுகளும்,  ஒருங்கிணைந்த மேல்நிலைப் பணியாளர் தேர்வுகளும் இனி தமிழ் உள்ளிட்ட  13 மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மத்திய அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

மத்திய அரசு நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளையும்,  நுழைவுத் தேர்வுகளையும் தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கடந்த  25 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகிறது.  அதற்காக  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சாதகமான  உறுதிமொழிகளைப் பெற்றுக் கொடுத்தது. பாட்டாளி மக்கள் கட்சியின் தமிழ்மொழியில் போட்டித் தேர்வு கனவு நனவானதில் மகிழ்ச்சி.

தமிழ் மொழியின் உரிமைகளை ஒவ்வொன்றாக போராடிப் பெறும் நிலை கூடாது. அன்னைத் தமிழ் மொழிக்கு அதற்குரிய அனைத்து உரிமைகளும், மரியாதையும் வழங்கப்பட வேண்டும்.  அதற்காக  தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளும் மத்திய அலுவல் மொழியாக்கப்பட வேண்டும். அந்த இலக்கை அடைவதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து போராடும். வெற்றி பெறும் என்று ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Savitha