பேருந்துகளில் இதை செய்ய தவறும்  பயணிகளுக்கு ரூ.50 அபராதம்!

0
76

பேருந்துகளில் இதை செய்ய தவறும்  பயணிகளுக்கு ரூ.50 அபராதம்!

இந்தியாவில் மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றானது மெல்ல குறைந்து வந்த நிலையில் அதன் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் நாட்டில் குறைந்து வந்த கொரோனா தொற்றானது தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அறிவித்து அதை அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன. அந்த வகையில் தற்போது ஆந்திர மாநிலத்திலும் கொரோனா தொற்றானது அதிக அளவில் பரவி வருகிறது.

எனவே தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி,

மாநிலத்தில் பரவி வரும் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் ஆக்ஸிஜன் வசதிகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்றும் இந்த மையத்தில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் உதவியாளர்கள் என அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளியில் வருபவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அவ்வாறு முகக்கவசம் அணிவதை அதிகாரிகள் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆந்திர மாநில பேருந்துகளில் முகக்கவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு ரூ.50 அபராதம் விதிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடக்கூடிய இடங்களில் 50 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் மேலும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஆந்திராவில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை  அதிகாரிகள் விரைந்து செய்ய வேண்டும் என்று அந்த ஆலோசனை கூட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.

author avatar
Parthipan K