பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண் விநாயகர் சிற்பம் கண்டெடுப்பு

0
80
panruti-ganesha-sculpture-in-panruti-then-pennai-river
panruti-ganesha-sculpture-in-panruti-then-pennai-river

பண்ருட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண் விநாயகர் சிற்பம் கண்டெடுப்பு

பண்ருட்டி அருகே எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண் விநாயகர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர் மோகனகண்ணன் ஆகியோர் மேற்புற களஆய்வு மேற்கொண்டனர்.

அப்பொழுது சுடுமண்ணலான விநாயகர் சிற்ப பொம்மையை கண்டறிந்தனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியுள்ளதாவது,

பண்ருட்டி அருகேயுள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் மேற்புற களஆய்வு மேற்கொண்டபோது சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுடுமண்ணாலான விநாயகர் சிற்ப பொம்மை கண்டறியப்பட்டது.

இந்த விநாயகர் சிற்பம் 15 சென்டிமீட்டர் உயரமும், 7சென்டிமீட்டர் அகலமும் கொண்டதாக உள்ளது. சுடுமண் விநாயகர் பொம்மை இரண்டு கரங்களுடன் காணப்படுகிறது. தலையில் கரண்ட மகுடமும், இரு காதுகளிலும் ஓட்டையும், துதிக்கை நீண்டும் உள்ளது.

இரு கைகளில் உள்ள தோள்களிலும் காப்பு அணிந்துள்ளார். விநாயகர் குழந்தையைப் போன்று பீடத்தின் மீது அமர்ந்துள்ளார். இதற்கு முன்பு பண்ருட்டி பகுதி தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில் சுடுமண்ணாலான உருவ பொம்மைகள் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் சுடுமண்ணாலான தெய்வ உருவ பொம்மை கிடைத்தது இதுவே முதல் முறையாகும். சுடுமண் விநாயகரின் சிற்ப அமைதியை பார்க்கும் போது இது சோழர்காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்றார்.

மேலும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் காரணமாக மண்ணுக்கடியில் இருந்து இச்சுடுமண் சிற்பம் வெளியே வந்திருக்கலாம் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் தெரிவித்தார்.