இந்தியா எல்லா போட்டிகளையும் வெல்ல ஆசைப்படும் பாகிஸ்தான் ரசிகர்கள்… காரணம் என்ன?

0
63

இந்தியா எல்லா போட்டிகளையும் வெல்ல ஆசைப்படும் பாகிஸ்தான் ரசிகர்கள்… காரணம் என்ன?

சூப்பர் 12 லீக் போட்டிகளில் இந்தியா அணி இதுவரை 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

சூப்பர் 12 லீக் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. இதனால் இனிவரும் அனைத்துப் போட்டிகளையும் பாகிஸ்தான் அணி வெல்ல வேண்டும். அப்படி வென்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்தே அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்புகள் இருக்கும்.

மிகவும் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாகவும், உலகக்கோப்பை வெல்ல வாய்ப்புள்ள அணியாகவும் கருதப்பட்ட பாகிஸ்தான், தற்போது மோசமான நிலையில் உள்ளது. அரையிறுதிக்கு செல்வதற்கான வாய்ப்பு மிகவும் பரிதாபகரமாக உள்ளது. அதற்குக் காரணம் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தோல்வி அடைந்ததுதான்.

இந்தியாவுக்கு எதிரான தோல்வியாவது ஒரு பெரிய அணிக்கு எதிரான தோல்வி. ஆனால் ஜிம்பாப்வே போன்ற கத்துக்குட்டி அணிக்கு எதிராக 130 ரன்களை சேஸ் செய்ய முடியாமல் தோற்றது, அந்த அணி மீது கடுமையான விமர்சனங்களை எழச் செய்துள்ளது. இந்நிலையில் இன்று நெதர்லாந்தை எதிர்கொள்ளும் பாகிஸ்தான் அந்த போட்டியில் வெல்லும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியும், பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களும் இந்திய அணி எதிர்கொள்ளும் அனைத்து லீக் போட்டிகளையும் வெல்ல வேண்டும் என பிராத்திப்பார்கள். ஏனென்றால் அப்போதுதான் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு உயிரோடு இருக்கும். இந்தியா இன்று தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியை தென் ஆப்பிரிக்கா வென்றால் பாகிஸ்தான் நிலைமை இன்னும் மோசமாகும்.