டெல்லியின் ஆதரவை எதிர்பார்க்கும் ஓபிஎஸ்! பலிக்குமா எடப்பாடி பழனிச்சாமியின் கனவு?

0
90

பிரதமர் நரேந்திர மோடியும் உள்த்துறை அமைச்சர் அமித்ஷாவும், கேட்டுக் கொண்டதால் நான் 2017 ஆம் ஆண்டு பழனிச்சாமியுடன் இணைந்தேன். ஆகவே அவர்கள் இருவரும் நம்மை கைவிட மாட்டார்கள் என்று ஆதரவாளர்களுக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் நம்பிக்கை வழங்கி வருவதாக தகவல் கிடைத்திருக்கிறது.

இரட்டை தலைமை நீக்கிவிட்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி கட்சியின் பொதுச் செயலாளராவதற்கு அவருடைய ஆதரவாளர்கள் முயற்சி செய்தனர் இதற்கு பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால் 5 வருடங்களுக்கு பின்னர் மறுபடியும் அதிமுகவில் கட்சி முதல் உச்சத்தை எட்டி இருக்கிறது எம்ஜிஆரின் மறைவுக்குப் பின் அதிமுகவுக்கு உரிமை கோரி ஜெயலலிதாவும், ஜானகி அணியும், யுத்தம் நடத்தினர். அப்போது கட்சியின் பெயரும் சின்னமும் முடக்கப்பட்டது.

கடந்த 1989 ஆம் வருடம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி அணி இரட்டை புறா சின்னத்திலும், போட்டியிட்டது. 27 சட்டசபை உறுப்பினர்களுடன் 22.37% ஓட்டுகளை பெற்று பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை ஜெயலலிதா பெற்றார் அதன் பின்னரே அதிமுக அவரிடம் வந்தது. ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு பன்னீர்செல்வம் சசிகலா என்று மாறிய இந்த யுத்தம் சில மாதங்களிலேயே பழனிச்சாமி பன்னீர்செல்வம் என்று யூட்டர்ன் அடித்தது.

அதிக அளவிலான சட்டசபை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அதிகாரம் ஆட்சி உள்ளிட்டவை கையில் இருந்தும் சென்னை ஆர் கே நகர் இடைத்தேர்தலின் போது பன்னீர்செல்வத்தின் எதிர்ப்பு காரணமாக, அதிமுக கட்சி பெயரும் ,இரட்டை இலை சின்னமும், முடக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தான் பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் இணைந்தனர். பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து சசிகலா நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று இரட்டை தலைமையின் கீழ் அந்த கட்சி கொண்டுவரப்பட்டது.

2017 ஆம் வருடம் போலவே தற்போதும் எடப்பாடி பழனிச்சாமி பக்கமே பெரும்பாலான நிர்வாகிகள், மாவட்ட செயலாளர், சட்டசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்டோர் இருந்து வருகிறார்கள். ஆனாலும் பழனிச்சாமியால் பொதுச் செயலாளர் என்ற பதவிக்கு வந்து கட்சியை தன்னுடைய கட்டுக்குள் கொண்டு வந்து விட முடியாது என்பதில் பன்னீர்செல்வம் நம்பிக்கையுடன் இருப்பதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள், பிரதமர் நரேந்திர மோடியும், அமித்ஷாவும், கேட்டுக் கொண்டார்கள், அதன் காரணமாகத்தான் பழனிச்சாமி உடன் இணைந்தேன் ஆகவே மோடியும், அமித்ஷாவும், ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார் பன்னீர்செல்வம்.

பழனிச்சாமியின் வசம் அதிமுக சென்று விட்டால் என்ன நடக்கும் என்பது பாஜகவின் தலைமைக்கு நன்றாகவே தெரியும்.. சென்ற சட்டசபை பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு கிடைத்த 75 சட்டசபை உறுப்பினர்கள் இரட்டை தலைமைக்கு கிடைத்த வெற்றி. பழனிச்சாமி கட்சியை கைப்பற்றும் முயற்சியை தொடர்ந்தால் 2017 ஆம் ஆண்டு போலவே இரட்டை இலை சின்னம் இல்லாமல் போய்விடும் என தன்னுடைய ஆதரவாளர்களுக்கு பன்னீர்செல்வம் நம்பிக்கை வழங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது.

பொதுச் செயலாளருக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய கட்சியின் விதிகளில் செய்யப்பட்ட பல திருத்தங்கள் பழனிச்சாமிக்கு எதிராக இருப்பதாக தன்னுடைய ஆதரவாளர்களிடம் பன்னீர்செல்வம் தெரிவித்து வருகிறார். வடக்கு மேற்கு மாவட்டங்களை தவிர்த்து, மற்ற பகுதிகளில் இருக்கின்ற மாவட்ட செயலாளர்களிடம் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் நடந்தவற்றை எடுத்துச் சொல்லி பன்னீர்செல்வம் ஆதரவு திரட்டி வருவதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவிக்கிறார்கள்.