அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு :! தமிழக ஆளுநருக்கு கடிதம் !!

0
56

தமிழகத்தில்   உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில், அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகின்றனர். இந்நிலையில், அண்ணா பல்கலை கழகத்தின் நிர்வாக வசதிக்காக பல்கலைக் கழகத்தினை இரண்டாக பிரிக்க, சட்ட மசோதா கடந்த 16- ஆம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்றும், புதியதாக உருவாக்கப்படும் பல்கலைக்கழகங்களுக்குஅண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இதற்கு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தரப்பில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.இதனைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் கருப்பு நிற பேட்ச் அணிந்து உள்ளிருப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். பெயர் மாற்றத்திற்கு எதிராக நீதிமன்றமும் நாடார் தயாராக இருப்பதாக பேராசிரியர் தரப்பில் கூறப்பட்டுள்ளனர்.தற்பொழுது, பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக்கூடாது என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

author avatar
Parthipan K