இந்த விவகாரத்தை தமிழக அரசு கவனமுடன் கையாள வேண்டும்! எச்சரிக்கும் டிடிவி தினகரன்!

0
65

தமிழகத்தில் நோய்த்தொற்று காரணமாக, பாதிக்கப்பட்டவர்களில் மற்றும் அதிகமாக பாதிக்கப்படுவோர் சென்னையை சார்ந்தவர்களாக உள்ளதால் தலைநகர் சென்னையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு இன்னமும் தீவிரம் காட்ட வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருக்கிறார்.

பொங்கல் பண்டிகை வரவிருப்பதால் சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்கள் இன் மூலமாக நோய்த்தொற்று பரவல் தமிழ்நாடு முழுவதும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே தமிழக அரசு இதனை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் கட்டுக்குள் இருந்த நோய்த்தொற்று பரவல் கடந்த சில தினங்களாக மின்னல் வேகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்காக இரவு நேர ஊரடங்கும, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு, உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு இருக்கின்றது. இருந்தாலும் நோய் தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை, தினசரி நோய் தொற்று பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டி வருகிறது.

அதிலும் குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்து விட்டது. இதற்கிடையே பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதன் காரணமாக, நோய்த்தொற்று பரவல் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்ற அச்சம் பொது மக்களிடையே நிலவி வருகிறது. இதன் காரணமாக, கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில், தலைநகர் சென்னையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என்று டிடிவி தினகரன் கோரிக்கை வைத்திருக்கின்றார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கின்ற வலைதள பதிவில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமாக பாதிப்பு உண்டானவர்கள் சென்னையை சார்ந்தவர்களாக இருப்பதால் தலைநகர் சென்னையில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு இன்னும் தீவிரம் காட்ட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் டிடிவி தினகரன்.

அடுத்ததாக பொங்கல் பண்டிகையை வரவிருப்பதால் சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களின் மூலமாக நோய்த்தொற்று பரவல் தமிழ்நாடு முழுவதும் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆகவே அரசு இதனை மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும் என கூறியிருக்கிறார்.

தலைநகர் சென்னையின் நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு வார்டு ரீதியாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். நிலைமை கைமீறி போவதற்குள்ளாக தமிழக அரசு உடனடியாக விரைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டிருக்கிறார்.