டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு! 3- வது முறையாக திறந்து வைத்த முதல்வர்! 

0
90
#image_title

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு! 3- வது முறையாக திறந்து வைத்த முதல்வர்! 

காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையை இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு  தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

மேட்டூர் அணை திறப்பின் மூலம் வரும் தண்ணீரால் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர்,நாகப்பட்டினம், புதுக்கோட்டை உட்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் நிலத்தில் குருவை சம்பா தாளடி ஆகிய பயிர்கள் பாசன வசதி பெற்று பயிரிடப்படுகிறது.

அதேபோல் இந்த ஆண்டு ஐந்து லட்சம் ஏற்க குழுவை சாகுபடி செய்வதற்கு இலக்கானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் 90 கோடி மதிப்பீட்டில் 4773 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கமான ஒன்றாகும். அணையில் உள்ள நீர் இருப்பை பொறுத்து ஜூன் மாதம் 12-ஆம் முன்னதாகவோ காலதாமதமாகவோ திறந்துவிடப்பட்டு வருகிறது.

அணை கட்டப்பட்டு 90 ஆண்டு வரலாற்றில் மேட்டூர் அணை குறித்த தேதியான ஜூன் 12ஆம் தேதி இந்த ஆண்டுடன் 19 ஆண்டுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நீர்மட்டம் அதிகரித்து வந்ததால் மே மாதம் திறக்கப்பட்டது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் மலர்களை தூவி மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.

இந்த தண்ணீரானது மூன்று நாட்களுக்குள் கல்லணையையும், 7 நாட்களில் கடைமடை பகுதியையும் தண்ணீர் சென்று சேரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறையினர் செய்திருந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், மற்றும் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் கலந்து கொண்டனர்.