அரிசி மாவு மட்டும் இருந்தால் போதும்! உடனடியாக பேஸ் பேக் ரெடி!

0
106

அரிசி மாவு மட்டும் இருந்தால் போதும்! உடனடியாக பேஸ் பேக் ரெடி!

பெண்கள் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பது நம்முடைய முகம் பளிச்சென்று பிரகாசமாகவும் இருக்க வேண்டும். முகப்பரு, கரும்புள்ளி போன்றவைகள் ஏற்படாமல் நாம் பாதுகாக்க வேண்டும் என்பதுதான்.

அதற்கு பார்லரே செல்லாமல் என்ன செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் முகத்தை நன்கு கழுவி கொள்ள வேண்டும். அரிசி மாவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் காய்ச்சாத பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனை நம் முகத்தில் நன்கு அப்ளை செய்து கொள்ள வேண்டும். முகத்தில் அப்ளை செய்தவுடன் நன்கு மசாஜ் செய்து கொள்ள வேண்டும். பத்து நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்து முகத்தை கழுவ வேண்டும்.

அதன் பிறகு ஒரு டீஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் கோதுமை மாவு அல்லது முல்தானி மெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும், அதன் இரண்டையும் நன்கு கலந்து அதனுடன் சிறிதளவு காபி பவுடர் சேர்க்க வேண்டும். அதன் பிறகு அதில் சிறிதளவு ரோஸ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் அப்ளை செய்து கொள்ள வேண்டும். அதனை 10 முதல் 15 நிமிடம் நான் காயவைத்து பிறகு கழுவ வேண்டும்.

 

author avatar
Parthipan K