புதையல் எனக்கு மட்டும் தான் கிடைக்க வேண்டும்! நண்பரையே நரபலி கொடுத்த சம்பவம்!

0
144
Only I can get the treasure! The incident of human sacrifice of a friend!
Only I can get the treasure! The incident of human sacrifice of a friend!

புதையல் எனக்கு மட்டும் தான் கிடைக்க வேண்டும்! நண்பரையே நரபலி கொடுத்த சம்பவம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன்.இவர் விவசாயம் செய்து வருகின்றார்.இவருக்கு நாகராஜ் ,சிவகுமார் என்று இரண்டு மகன்களும் ,தனலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.இவருடைய மனைவி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு லட்சுமணன் மகள் தனலட்சுமிக்கு பேய் பிடித்துள்ளது எனவும் அதனை ஓட்டுவதற்கு சிரஞ்சீவி என்ற சாமியார் வந்துள்ளார்.அவர் பேயை ஓட்டி விட்டு செல்லும் பொழுது லட்சுமணன் வீட்டின் அருகில் உள்ள வெற்றிலை தோட்டத்தில் புதையல் இருகின்றது என கூறி சென்றார் என கூறப்படுகின்றது.

அதனையடுத்து கடந்த 28ஆம் தேதி வீட்டின் அருகே வெற்றிலை தோட்டத்தில் ஒன்றரை அடி குழியில் மர்மமான முறையில் லட்சுமணன் உயிரிழந்து கிடந்தார். ஆனால் அந்த குழியின் முன்பு வெற்றிலை ,பாக்கு ,எலுமிச்சை பழம் ,மஞ்சள் ,குங்குமம் போன்ற பூஜை பொருட்கள் மண்வெட்டி மற்றும் கோழி போன்றவைகள்  கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசார்க்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.அந்த விசாரணையில் முருங்க மர தரிசு கிராமத்தை சேர்ந்த மணி என்பவரை அழைத்து விசாரணை நடத்தினார்கள் அதில் மணியும் லட்சுமணனும் நண்பர்கள்.பேய் ஓட்ட வந்த பூசாரி கூறியதை கேட்டு புதையல் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேய் பிடித்த தனலட்சுமியை நரபலி கொடுக்க முடிவு செய்ததாகவும்.அந்த நேரத்தில் அந்த பெண் வரவில்லை என்பதால் லட்சுமணனை கொலை செய்து நரபல்லி கொடுத்ததும் புதையல் எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
Parthipan K