ஆன்லைன் சூதாட்ட மோகம்! தனது ஆசை மனைவியையே கத்தியால் குத்தி பிளாஸ்டிக் கவரில் கட்டிய  அவலம்!

0
103
Online gambling craze! Alaam, who stabbed his beloved wife with a knife and tied her in a plastic cover!
Online gambling craze! Alaam, who stabbed his beloved wife with a knife and tied her in a plastic cover!

ஆன்லைன் சூதாட்ட மோகம்! தனது ஆசை மனைவியையே கத்தியால் குத்தி பிளாஸ்டிக் கவரில் கட்டிய  அவலம்!

ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்யும் படி பலர் அரசிடம் கோரிக்கை வைத்து தான் வருகின்றனர். இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றது. அந்த வரிசையில் திருச்சியில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் சக்தி என்ற நகரில் வசித்து வருபவர் தான் நரசிம்ம ராஜ் மற்றும் இவரது மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது. நரசிம்ம ராஜ் ஆரம்பகட்ட காலத்தில் இருந்தே லாட்டரி டிக்கெட் விற்பனை செய்வது, ஆன்லைன் ரம்மி சூதாட்டம் விளையாடுவது என்று செய்து வந்துள்ளார்.

இவர் மீது லாட்டரி டிக்கெட் விற்ற வழக்குகளும் உண்டு. இவர் இருந்த சொந்த வீட்டை சூதாட்டத்தில் போடுவதற்காக விற்றுயுள்ளார். பிறகு சமயபுரத்தில் வாடகை வீடு எடுத்து தனது மனைவி தாய் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார். சொந்த வீட்டை விற்ற பணத்தையும் சூதாட்டத்தில் முதலீடு செய்ததால் இவரது மனைவி அதனை கண்டித்து வந்துள்ளனர். இதற்கிடையே தனது தாய் மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு விஜயவாடாவில் உள்ள அவரது அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். தனது மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அம்மா மற்றும் குழந்தைகளை இங்கு விட்டு செல்வதாக தனது அக்காவிடம் கூறி இவர் மட்டும் திரும்பி வந்துள்ளார்.

அவ்வாறு வந்த நரசிம்மராஜ் அவரது மனைவியுடன் தொடர்ந்து சண்டையிட்டுள்ளார். அவ்வாறு இருவருக்கும் நடந்த சண்டையில் நரசிம்ம ராஜ் தனது மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தனது மனைவி உயிரிழந்ததை அறிந்த நரசிம்ம ராஜ் அவரது மனைவியின் உடலை பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டி உள்ளார். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என எண்ணி அந்த பிளாஸ்டிக் பையில் மஞ்சள் மிளகாய் பொடிகளை தூவி உள்ளார். தினந்தோறும் அவரது மனைவி சிவரஞ்சனி தனது பெற்றோருக்கு அழைப்பு விடுத்து பேசி வந்துள்ளார்.

மூன்று நாட்கள் ஆகியும் அவரது மகளிடமிருந்து அழைப்பு வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அவர் இருந்த குடியிருப்பு பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது வீடு பூட்டப்பட்டு இருந்தது. அக்கம் பக்கத்தில் விசாரித்த பொழுது மூன்று நாட்களாக வீடு பூட்டி இருப்பதாக தெரிவித்துள்ளனர். வீட்டை உடைத்துப் பார்க்கையில் அவரது மகளின் கால் மட்டும் தெரிந்துள்ளது. பிறகு சடலமான முறையில் பிளாஸ்டிக் பையில் தனது மகன் உள்ளதை கண்ட பெற்றோர் அதிர்ந்து போய் உள்ளனர். பிறகு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தற்போது தலைமறைவாக உள்ள அவரது கணவர் நரசிம்மராஜை தேடி வருகின்றனர்.