திமுக எம்பி ராசாவின் நாக்கை அறுத்து வந்தால் ஒரு கோடி மற்றும் ஒரு ஏக்கர் நிலம்!! இணையத்தில் வைரலாகும் பதிவு!

0
135
One crore and one acre land if DMK MP Raza's tongue is cut!! A record that goes viral on the Internet!
One crore and one acre land if DMK MP Raza's tongue is cut!! A record that goes viral on the Internet!

திமுக எம்பி ராசாவின் நாக்கை அறுத்து வந்தால் ஒரு கோடி மற்றும் ஒரு ஏக்கர் நிலம்!! இணையத்தில் வைரலாகும் பதிவு!

திமுக துணை பொது செயலாளர் ஆன ஆ ராசா சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேடையில் பேசுகையில் ஹிந்து மதத்தை குறித்து மிகவும் அவதூறாக பேசினார். நீ ஹிந்துவாக இருக்கும் வரை நீ ஒரு சூத்திரன், சூத்திரனாக இருக்கும் வரை நீ ஒரு விபச்சாரியின் மகன் தான் என இவ்வாறு அவர் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இவ்வாறு இவர் இந்துக்கள் குறித்து மிகவும் அவதூறாக பேசியது குறித்து அவர்  மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் மற்றும் பல கட்சிகள் கூறிவரும் நிலையில், திமுக எதையும் கண்டுக்கொள்ளாமல் மவுனத்தையே காத்து வருகிறது.

இவ்வாறு இருக்கையில் மதுரை மாவட்டம் பசுக்காரன்பட்டி சேர்ந்தவர் தான் கண்ணன். இவர் மக்கள் புரட்சி என்ற படையை சேர்ந்தவர். இவர் திமுக பொதுச் செயலாளர் ஆ ராசா இந்துக்கள் குறித்து அவதூறாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ராசா அவர்கள் இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இந்துக்களை அவதூறாக பேசிய அவரது நாக்கை அறுத்துக் கொண்டு வருபவர்களுக்கு ஒரு கோடி ரொக்கம் வழங்கப்படும், ஒரு ஏக்கர் நிலமும் வழங்கப்படும் இவ்வாறு அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இவ்வாறு இவர் இணையத்தில் பதிவிட்டதை அடுத்து பலர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.புகாரின் பேரில்  போலீசார் தற்பொழுது கண்ணனை கைது செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.