விநாயகர் சதுர்த்தியில். கடன் பிரச்சனைகள் தீர!..நீங்கள் வழிபட போகும் விநாயகர். குபேர விநாயகரா?

0
164

விநாயகர் சதுர்த்தியில். கடன் பிரச்சனைகள் தீர!..நீங்கள் வழிபட போகும் விநாயகர். குபேர விநாயகரா?

 

எந்த ஒரு மனிதராக இருந்தாலும் முதலில் நம் கடவுளாகிய விநாயகரை தான் வழிபடுவார்கள். அவரை வழிபட்டு தான் பிற தெய்வங்களை வழிபடுவார்கள்.இவை நம் காலம் காலமாக செய்து வருகிறோம்.எளிய முறையிலான பூஜைகளை கொண்ட விநாயகர் வழிபாடு எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. முழுமுதற் கடவுள் மூலப்பொருளோன் என்று சொல்லி அனைவரும் வணங்குவது விநாயகரையே. எந்த செயல்களை செய்யும் முன்பும் பிள்ளையார் சுழி போட்டு தான் ஆரம்பிக்கிறோம். யார் கூப்பிட்டாலும் ஓடோடி வந்து அருள்புரிவார் விநாயகர்.அனைவருக்கும் இஷ்ட தெய்வமாக விளங்கும் விநாயகருக்கு ஆவணி மாத சதுர்த்தி திதியில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி நாள் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.விநாயகர் சதுர்த்தியில் உங்களின் கடன் பிரச்சனைகள் தீர்ந்து வளமான வாழ்வை பெற குபேர விநாயகரை வைத்து வழிபடுங்கள். குபேர வாழ்வை தந்து உங்களின் அனைத்துவித கஷ்டங்களில் இருந்து காத்தருள்வார்.

கணபதியை வணங்கினால் காரியத்தடைகள் யாவும் நீங்கும். விக்ன விநாயகரை வணங்க வினை யாவும் நெருங்காது. ஜாதகத்தில் திருமணத்தடை உள்ள பெண்கள் சதுர்த்தி விரதத்தை கடைபிடித்தால் தடை விலகி நல்ல வரன் தேடி வந்து அமையும்.விநாயகர் வழிபாடே சிறந்தது. அதிலும் கடன் பிரச்சனைகளை தீர்த்து குபேர வாழ்வு தரும் குபேர விநாயகரை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் ஏராளம். குபேரனின் பரிபூரண அருளை பெற்றிருப்பதால் இவர் குபேர விநாயகர் என அழைக்கப்படுகிறார்.தொழிலில் தொடர் நஷ்டத்தை சந்தித்து வருபவர்கள்.வியாபாரத்தை விருத்தி செய்ய முடியாமல் தவிப்பவர்கள்.

திருமணத்தடையால் சிரமப்படுபவர்கள்.

கடன் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள்.
குடும்ப பிரச்சனைகளால் கஷ்டப்படுபவர்கள்.வேலையின்மையால் வேதனைப்படுபவர்கள்.இந்த குபேர விநாயகரை நாள்தோறும் வழிபட்டால் நிச்சயம் உங்கள் வாழ்வில் மாற்றம் உண்டாகும்.
கல்வி, ஆரோக்கியம், அரசருக்கு நெருக்கமான பதவிகளில் அமரும் யோகத்தை குபேர விநாயகர் தரக்கூடிய வல்லமை படைத்தவர். வியாபாரத்தில் விருத்தி அம்சம் பெறவும் குபேர விநாயகரை வணங்கலாம்.

author avatar
Parthipan K