அட கடவுளே! இந்த நடிகைக்கு ஏற்பட்ட பரிதாபம்! இரங்கலை தெரிவிக்கும் திரையுலகம்!

0
111
Oh God! What a pity for this actress! Mourning screen world!
Oh God! What a pity for this actress! Mourning screen world!

அட கடவுளே! இந்த நடிகைக்கு ஏற்பட்ட பரிதாபம்! இரங்கலை தெரிவிக்கும் திரையுலகம்!

சினிமா திரையுலகில் வருடந்தோறும் புது கதாநாயகிகள் அறிமுகமாகின்றனர்.அவ்வாறு அறிமுகமானவர்களில் அனைவரும் பிரபலமடைந்து விடுவதில்லை.யாரேனும் ஓர் சிலரே பிரபலமடைகின்றனர்.அதுமட்டுமின்றி பலர் ஓர் படம் மட்டும் நடித்துவிட்டு இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுகின்றனர்.அவ்வாறு புதுமுக கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் தான் மியா ஜார்ஜ்.இவர் முதலில் ஆர்யாவின் தம்பி நடித்த அமரகாவியம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அந்த படம் அதிகளவு வெற்றியடைந்தது.அந்த முதல் படத்திலேயே அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்.அதனையடுத்து நடிகர் விஷ்ணு நடித்த இன்று நேற்று நாளை என்ற படத்தில் நடித்தார்.அந்த படம் பார்வையாளர்களை அதிகளவு கவர்ந்தது.இந்த படத்தின் பாட்டின் மூலமே மியா ஜார்ஜ் அதிகளவு பிரபலமடைந்தார்.அந்த படத்தில் அதிகளவு பிரபலமடைந்ததை அடுத்து பல படங்களில் நடிக்கும் வாய்புகள் குவிந்தது.அந்த பட்டியலில் வெளிவந்த படங்கள் ,சசிகுமார் நடிப்பில் வந்த வெற்றிவேல்,விஜய் ஆண்டினியின் எமன்,ஒரு நாள் கூத்து போன்றவை ஆகும்.

மியாஜார்ஜ் கேரளாவை சேர்ந்தவர்.அதனால் இவருக்கு கேரளா பட வாய்ப்புகள் அதிகளவு குவிந்தது.அதனையடுத்து மியா ஜார்ஜ் கேரளாவை சேர்த்த தொழிலதிபர் அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு லுகா ஜோசப் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.இவர் திருமணத்திற்கு பிறகு நடிக்க வர மாட்டார் என பலர் கூறினர்.அவ்வாறு கூறியவர்களின் மத்தியில் விக்ரமின் கோப்ரா என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தனது ரீஎண்ட்ரியை கொடுக்க உள்ளார்.

மியா ஜார்ஜ் தந்தை ஜார்ஜ் ஜோசப்.அவரின் தந்தைக்கு தற்பொழுது 75 வயதாகிறது.இவர் சில காலமாக உடல்நலக் குறைவால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.இன்று அவரது தந்தை கேரளாவில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பலனின்றி காலமானார்.இவரது தந்தையின் இறுதி சடங்கானது கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சர்ச்சில் நடைபெற உள்ளதாக கூறியுள்ளனர்.இதனை அறிந்த திரையுலகினர் இவருக்கு இணையத்தள வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.