இந்த ஏழு மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க காத்திருக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடுமையான எச்சரிக்கை!

0
81

தமிழ்நாட்டில் இன்றைய தினம் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, கோவை, ஈரோடு, மதுரை, நீலகிரி, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.

நாளைய தினம் தென் மாவட்டங்களான பெரம்பலூர், அரியலூர், கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. கள்ளக்குறிச்சி, கரூர், நீலகிரி, விழுப்புரம், கரூர், கள்ளக்குறிச்சி, உதகமண்டலம், கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.