தமிழகத்தையே உலுக்கிய கொலை வழக்கு! சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு!

0
95

சென்னை சூளைமேடு பகுதியைச் சார்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான சுவாதி கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்த கொலை குறித்து ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் தொடக்கம் முதலே பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும் யாரோ ஒருவரை காப்பாற்றுவதற்காக ராம்குமார் பல்கடாக்கப்பட்டார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தனர். இந்த நிலையில், கடந்த 2016 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி சிறையில் மின்சார வயரை கடித்து ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

ஆகவே சுவாதி இறப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்து சுவாதியின் தாயார் ரங்கநாயகி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனதில் ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையின் அலட்சியம் காரணமாகவே சுவாதி கொலை செய்யப்பட்டார் என்பதால், ரயில்வே நிர்வாகம் சார்பாக இழப்பீடாக 3 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர். சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அந்த சமயத்தில் ரயில்வேத்துறை தரப்பில் பயணிகளுக்கு ரயில்வே நிர்வாகம் சரியான பாதுகாப்பு வழங்கி வருகிறது எனவும், சுவாதி கொலை என்பது திட்டமிட்ட சம்பவம் எனவும், கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இழப்பீடு கோரி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதி ஆர். சுப்பிரமணியன் சுவாதி பெற்றோரின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.