இனி ஒரு பைசா வட்டி இல்லாமல் கடன் பெறலாம்!! பேடிஎம் கொண்டு வந்த அதிரடி திட்டம்!!

0
106
#image_title

இனி ஒரு பைசா வட்டி இல்லாமல் கடன் பெறலாம்!! பேடிஎம் கொண்டு வந்த அதிரடி திட்டம்!!

பேடிஎம் நிறுவனம் – ஆதித்யா பிர்லா ஃபினான்ஸ் லிமிட்டட் நிறுவனத்துடன் இணைந்து சுமார் 60 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

முன்பு அவசர தேவைக்கோ? இல்லை மருத்துவ தேவைக்கோ? கல்யாணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கும் தெரிந்தவர்களிடம் கடன் வாங்குவது வழக்கம். ஆனால் தற்போது வேலை பார்க்கும் அனைவரும் தேவையும் இல்லையா கடனை மட்டும் வாங்கிக் கொள்கின்றனர்.

கிரெடிட் கார்டு மூலம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்த பணத்தை செலவழித்து, பிறகு அதற்குரிய பணத்தை சிறிது சிறிதாக செலுத்தும் வழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. இ.எம்.ஐ மூலம் தான் நிறைய பொருட்களை நாம் வீட்டில் வாங்கி வைத்துள்ளோம்.

ஆனால் அந்தக் கார்டை நாம் சரியாகப் பயன்படுத்தி செலவழித்தால் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. பேடிஎம் உள்ளிட்ட ஆப்கள் செய்திகள் மூலம் கட்டணம் பெற்று அவசர தேவைகளுக்கு கடன் பெற்று அதனை உரிய முறையில் திருப்பி செலுத்தினால், இன்னும் அதிக தொகைக்கு கூட கடன் பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் நம்மில் சிலர் கிரெடிட் கார்டு மூலம் வாங்கி கடனை திருப்பி செலுத்துவதில்லை. இ.எம்.ஐ க்காண தொகையும் சரியாக திருப்பி செலுத்துவதில்லை. அதுதான் இங்கு பிரச்சனையாக உள்ளது. நாம் கடனை உரிய நேரத்தில் சரியாக திருப்பி செலுத்தினால் அடுத்தடுத்து கடன் பெறுவது மிகவும் சுலபம்.

அவசர தேவைக்கு கடன் பெறுவது குறித்து நிறைய வழிமுறைகள் உள்ளன. உரிய ஆவணங்கள் ஒப்புதல் என நிறைய வழிமுறைகள் உள்ளன. அதனை போக்கும் வகையிலும், எளிய முறையில் கடன் பெறும் வழிமுறைகளும் தற்போது வந்துள்ளன.

சுலபமாக கடன் பெறுவது குறித்து, பேடிஎம் நிறுவனம் – ஆதித்யா பிர்லா ஃபினான்ஸ் லிமிட்டட் நிறுவனத்துடன் கூட்டாக இணைந்து சுமார் 60 ஆயிரம் வரை கடனை வழங்குகிறது ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் குடும்ப செலவுகள், ரீச்சார்ஜ் முதல், டிடிஎச் ரீசார்ஜ், சிலிண்டர் கட்டணம், மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றை இந்த கடன் மூலம் செலுத்த முடியும்.

வாடிக்கையாளர்கள் ரூ.60 ஆயிரம் என்றில்லை, ரூ. 250 முதல் ரூ. 1000 வரையில் கூட கடன் பெற்றுக்கொள்ளலாம் என்பது இதன் சிறப்பம்சம்.

இது வட்டியில்லா கடன் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு பேடிஎம் ஆபில் இதுபற்றி தெரிந்து கொள்ளலாம்.

இது பேடிஎம் செயலி மூலம் மட்டுமே கடன் பெற முடியும் பிறகு அதில் தான், நாம் வங்கி தொகையைசெலுத்த வேண்டும்.

author avatar
CineDesk