சென்னையில் ’சும்மா கிழி கிழி’ மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

0
46

சென்னையில் ’சும்மா கிழி கிழி’ மழை: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழை பல இடங்களில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில் மீண்டும் சென்னைக்கு பலத்த மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்

மழை குறித்த விபரங்களை அவ்வப்போது ஃபேஸ்புக்கில் பதிவு செய்து வரும் தமிழ்நாடு வெதர்மேன் என்ற பிரதீப் ஜான் இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் கூறியபோது, ‘நேற்றிரவு சென்னை மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளில் பெய்தது ஒரு மழையே இல்லை. இதைவிட பெரிய மழை நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1,2 ஆகிய தேதிகளில் பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை மக்களை மழை வச்சு செய்ய போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்

சென்னையில் பகலில் வானம் சற்று வெறிச்சோடியிருக்கும் என்றும் சில இடங்களில் சூரியன் சுட்டெரிக்கும் என்றும் ஆனால் இரவு மற்றும் அதிகாலை மழை வெளுத்து வாங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

நேற்று தாம்பரம் 6 மணி நேரத்தில் 146 மிமீ மழை பதிவாகியுள்ளதாகவும், மற்ற பகுதியிலும் நல்ல மழை பெய்துள்ளதாகவும் இதுவொரு மிகச் சிறந்த மழை என்றும் அவர் தெரிவித்துள்ளார்

சென்னை புறநகரில் ஏற்கனவே நேற்றிரவு பெய்த மழையால் வீடுகள் மிதந்து வரும் நிலையில் அடுத்து வரும் மழைக்கு தாங்குமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

author avatar
CineDesk