தந்தை மகன் மட்டுமில்லை அவரது உறவுகாரன் மூவரும் சேர்ந்து என்னை கற்பழித்தார்கள்! பாடகி பகீர்!

0
78

டெல்லியில் 25 வயது பாடகியை MLA ஒருவரும் அவரது மகன் மற்றும் உறவினர் தொடர்ந்து பலாத்காரம் செய்த சம்பவம் இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்து பெரிய அதிர்வலயை ஏற்படுத்தி உள்ளது.

 

நிஷாத் கட்சியைச் சேர்ந்தவர் MLA தான் இவர் விஜய் மிஸ்ரா. இவர் மீதுதான் 25 வயது பாடகி பகீர் குற்றச்சாட்டை காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார்.

விஜய் மிஸ்ரா இப்பொழுது நில ஆக்கிரமிப்பு விவாகரத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் இவர் தைரியத்தை வரவழைத்து கொண்டு போலீசில் உண்மையை உடைத்துள்ளார்.

 

2014 ஆம் ஆண்டு நடந்த நிகழ்வை குறித்து அவர் இப்பொழுது பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். உத்திர பிரதேசத்தில் உள்ள பாடோசி மாவட்டத்தின், கோபிகஞ்ச், காவல் நிலையத்தில் பாடகி புகாரில் கூறியிருப்பதாவது ” மிஸ்ரா அவர் வீட்டில் இசை நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். நானும் சென்றேன். இசை கச்சேரி முடிந்து வீட்டிற்கு செல்ல முயற்சித்த போது வீட்டிற்குள் வைத்து என்னை கற்பழித்து விட்டார். இதை வீடியோ எடுத்து வைத்து கொண்டு வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக கூறி மிரட்டினர்”. 2015 ஆம் ஆண்டு மீண்டும் என்னை கற்பழித்து விட்டு அவரது மகனையும் உறவினர் ஒருவரை வீட்டில் கொண்டு போய் விட சொன்ன பொது அவர்களும் என்னை கற்பழித்து விட்டார்கள். என அவர் அந்த புகாரில் சொல்லியுள்ளார்.

அவர் அரசியல் பலம் மிக்க பெரிய புள்ளி என்பதால் மேலும் எனது வீடியோ அவரிடம் இருந்ததால் அவருக்கு பயந்து உண்மையை வெளியே சொல்ல முடியவில்லை இப்பொழுது சிறையில் உள்ளதால் தைரியம் வந்து சொல்கிறேன் என்று அந்த பாடகி தெரிவித்து உள்ளார்.

author avatar
Kowsalya