ஒரு மணி நேரம் ஆகியும் வேகவில்லை! போலி முட்டைகளை வாங்கி ஏமாந்த மக்கள்!

0
64
Not even an hour fast! Deceptive people who buy fake eggs!
Not even an hour fast! Deceptive people who buy fake eggs!

ஒரு மணி நேரம் ஆகியும் வேகவில்லை! போலி முட்டைகளை வாங்கி ஏமாந்த மக்கள்!

ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் என்னும் மாவட்டத்தில் வரிக்குண்டபாடு மண்டலத்தில் உள்ள கிராம பகுதிகளில் நேற்று முன்தினம் முட்டை விற்கும் ஒரு வியாபாரி மினி வேனில் முட்டைகளை ஏற்றிக்கொண்டு ஊருக்குள் முட்டைகளை விற்பதற்காக வந்துள்ளார். இதனைக் கண்டப் பொதுமக்கள் வண்டிலே முட்டை வருவதால் விலை என்ன என்று கேட்டனர். அதற்கு அந்த வியாபாரி 30 முட்டைகள் ரூபாய் 130 என கூறியுள்ளார்.

முட்டையின் விலைக் குறைவாக இருந்ததால் அங்கிருந்தக் கிராம மக்கள் முட்டைகளை அதிகம் வாங்கிச் சென்றனர். முட்டைகள் அனைத்தும் தீர்ந்த உடன் தனது வண்டியை எடுத்துக்கொண்டு கிராமத்தை விட்டு வெளியேறி விட்டார் அந்த முட்டை வியாபாரி.முட்டைகளை வாங்கியக் கிராம மக்கள் அவர்களது வீடுகளில் சமைக்கத் தொடங்கி உள்ளார்கள். சுமார் ஒரு மணி நேரம் ஆகியும் முட்டைகள் வேகவில்லை உடனே அனைவரும் சந்தேகத்தில் அக்கம் பக்கத்தில் ஒன்றுக் கூடி பேச ஆரம்பித்துவிட்டார்கள்.

முட்டைகளை உடைத்து பார்த்தால் உள்ளே ஒன்றுமில்லை பின்னர் தான் தெரிய வந்துள்ளது முட்டை வியாபாரி தங்களை ஏமாற்றி முட்டைகளை விற்பனை செய்துள்ளார் என்பது, முட்டையை பரிசோதனை செய்ததில் அது பிளாஸ்டிக் முட்டை போல் இருந்தது கிராம மக்கள் அனைவரும் முட்டை வியாபாரியிடம் ஏமாந்து விட்டோம் என்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்தார்கள். இதனை தொடர்ந்து வரிக் கொண்ட போலீஸ் நிலையத்தில் அந்த முட்டை வியாபாரியின் மீது  கிராம மக்கள் அனைவரும் புகார் அளித்துள்ளார்கள்.

author avatar
Parthipan K