தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கா? வெளிவந்த முடிவுகள்!

0
83
No night curfew in Tamil Nadu? Released results!
No night curfew in Tamil Nadu? Released results!

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கா? வெளிவந்த முடிவுகள்!

கொரோனா பாதிப்பானது கடந்த வருடம் பரவ ஆரம்பித்தது தற்போது வரை விடாமல் மக்களை அச்சுறுத்தி வருகிறது.அந்தவகையில் மக்களிடம், இந்த வருடம் கொரோனா தொற்றானது தனது 2 வது அலையை உருவாக்கி அதிக அளவு தொற்றை பரப்பி வருகிறது.மக்களின் நலன் கருதி கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

தொடர்ந்து பல்வேறு கட்டுபாடுகள் மற்றும் நடவடிக்கைகளை செயல்படுத்தினாலும் கொரோனா தொற்றானது சிறிதளவும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தமிழ்நாட்டில் 8000 ற்கும் மேற்பட்டோருக்கு தற்போது கொரோனா தொற்றானது உறுதியாகியுள்ளது.

அந்தவகையில் இந்தியாவில் ஓர் நாளில் மட்டும் 1,027 பேர் உயிரிழந்துள்ளனர்.நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் கட்டுபாடுகளுடன் கூடிய செயல்பாடுகளை நடைமுறைபடுத்தியுள்ளனர்.அப்போதும் கொரோனா தொற்று பரவுவது குறையவில்லை.அதிகம் தொற்று உள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் தற்போது 144 தடை உத்தரவு போட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி டெல்லியில் கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதால் வார இறுதி நாட்களை ஊரடங்காக செயல்படுத்தினர்.அந்தவகையில் தமிழ்நாட்டில் அதிக அளவு கட்டுப்பாடுகள் போடப்பட்டாலும் கொரோனா தொற்று பரவி வருகிறது.அதனால் ஊரடங்கு போடப்படும் என்ற வகையில் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.

நேற்று ஆரம்பித்த இந்த ஆலோசனைக்கூட்டம் இன்றளவும் எந்த முடிவுகளையும் தெரிவிக்கவில்லை.அந்தவகையில் இம்முடிவுகள் தாமதம் ஆவது மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதையே மக்கள் மனதில் உறுதிபடுத்துகிறது.இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவுகள் ஓரிரு நாட்களில் வெளிவரும் எஎன்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.நிச்சயம் இந்த அறிவிப்பில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவே கருதபடுகிறது.