இவர்களுக்கு இனி பிஎம் கிசான் திட்டம் இல்லை! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

இவர்களுக்கு இனி பிஎம் கிசான் திட்டம் இல்லை! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் மூலமாக வருடத்திற்கு 6,000 ரூபாய் என மூன்று தவணையாக வழங்கப்படும்.இந்நிலையில் ஹோலி பண்டிகைக்கு முன் சுமார் 12 கோடி விவசாயிகளுக்கு தலா ரூபாய் 2000  வழங்க உள்ளனர்.பிஎம் கிசான் சம்மன் நிதியின் 13 வது தவணையானது விவசாயிகளின் கணக்கில் சேர்க்கப்படும்.

இந்த பணம் விவசாயிகளின் நிதி தேவைக்கு சிறந்த பலனாக அமையும்.அதனால் விவசாயிகளுக்கு 16 ஆயிரம் கோடி ஆன்லைன் மூலம் வழங்கி உள்ளார்.பிரதமர் மோடி தற்போது வரையிலும் 12 வது தவணைகள் மூலம் 2 லட்சம் ரூபாய் கோடிக்கு அதிகமான பலன்களை பெற்றிருகினறனர்.பிஎம் கிசான் திட்டத்தில் இருந்து விளக்கப்பட்டவர்களில் நிறுவன நிலம் வைத்திருப்பவர்கள்,அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் விவசாய குடும்பங்கள் மற்றும் பணியாற்றும் அல்லது ஓய்வுபெற்ற அதிகாரிகள்,மாநில அல்லது மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களும்,அரசு தன்னாட்சிஅமைப்புகளும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவர்கள், பொறியாளர்கள்,வழக்கறிஞர்கள் ரூ 10,000 மேல் மாத ஓய்வூதியம் உள்ள ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்கள் மற்றும் கடந்த மதிப்பீட்டு ஆண்டில் வருமானவரி செலுத்தியவர்களும் இந்த திட்டத்தின் மூலம் பலன்களை பெற தகுதியற்றவர்கள் என கூறப்படுகின்றது.

Leave a Comment