இனி வீட்டில் ஈ தொல்லை இருக்கவே இருக்காது! கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் போதும்!

0
150
#image_title

இனி வீட்டில் ஈ தொல்லை இருக்கவே இருக்காது! கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய் போதும்!

நம் ஒவ்வொருவர் வீட்டிலேயும் ஈக்கள் அதிகமாக இருக்கக்கூடும். நாம் சமைத்து சாப்பிடக்கூடிய உணவுகள் மற்றும் பழங்கள், காய்கறிகள் மற்றும் ஸ்வீட் போன்றவைகளில் அதிகமாக ஈக்கள் காணப்படும். இவ்வாறு இருப்பதனால் நம் உடலுக்கு பல்வேறு வகையான நோய்களை உண்டாக்கி விடும். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே ஈக்கள் வராமல் தடுக்க முடியும்.

சூடம், பெருங்காயத்தூள், தேங்காய் எண்ணெய் , விளக்கெண்ணெய் ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்துள்ள பெருங்காயத்தூள் 1 ஸ்பூன் அதனுடன் 4 அல்லது 5 சூடம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நாம் எடுத்து வைத்துள்ள தேங்காய் எண்ணெயை அதனுடன் சேர்த்து மூன்றையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அதன் பிறகு அதனுடன் விளக்கெண்ணெய் சேர்த்து ஈக்கள் உள்ள இடங்களில் தெளித்து வரும் பொழுது கண்டிப்பாக ஈக்கள் வரவே வராது. ஈக்கள் அதிகம் வருவதன் காரணமாக கண்ணுக்கு தெரியாத நுண்கிருமிகள் வரக்கூடும். அதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நோய் தொற்றுக்கு உள்ளாகுவார்கள் இதனை தடுக்கவே இந்த முறை பயன்படுத்தப்படுகின்றது.

author avatar
Parthipan K