உங்கள் வீட்டில் தங்கம் இல்லையா! இதை செய்தால் வீட்டில் நிறைய தங்கம் சேரும்!!

0
97
#image_title
உங்கள் வீட்டில் தங்கம் இல்லையா! இதை செய்தால் வீட்டில் நிறைய தங்கம் சேரும்!
உங்கள் வீட்டில் துளி அளவு கூட தங்கம் இல்லை என்று தினமும் வருத்தப்பட்டு வருபவர்களாக நீங்கள் இருந்தால் இந்த பதிவு உங்களுக்கானது. இந்த பதிவில் கூறப்படும் மூன்று பொருட்களை வைத்தால் உங்கள் வீட்டில் தங்கத்தின் அளவு அதிகரிக்கத் தொடங்கும்.
நமது வீட்டில் ஏற்கனவே உள்ள தங்கத்தை அடமானம் செய்து வேறு ஒரு பிரச்சனையை சரி செய்து இருப்போம். அல்லது தங்கத்தை அடமானம் வைத்து வீடு கட்டுவது, தொழில் தொடங்குவது போன்ற பல தேவைகளுக்கு தீர்வாக இந்த தங்கத்தை அடமானம் வைத்து அதை மீட்க முடியாமல் அவதிப்படுவோம். அது மட்டுமில்லாமல் ஒரு சிலருக்கு தங்கம் வாங்கும் வாய்ப்பு கிடைக்காது. ஒரு சிலருக்கு தங்கத்தை அடமானம் வைப்பது அதை மீட்டெடுப்பது போன்று திரும்ப திரும்ப இந்த செயலை செய்து கொண்டிருப்போம். இந்த பதிவில் கூறப்படும் இந்த பரிகாரத்தை செய்தால் அந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகிவிடும். உங்கள் வீட்டில் தங்கம் போதும் போதும் என்ற அளவிற்கு சேரும்.
இந்த பரிகாரத்தை வீட்டில் தங்கம் இல்லாதவர்கள் தங்கம் இருந்தும் அடமானத்தில் வைத்தவர்கள் புதிதாக தங்கம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை செய்வது மூலமாக தங்கம் மட்டுமால்லாமல் பணமும் சேரத் தொடங்கும்.
இந்த பரிகாரத்தை செய்யத் தோவையான பொருட்கள்;
* பச்சை கற்பூரம்
* கிராம்பு
* துளசி இலை
பச்சை கற்பூரம் எல்லாருக்கும் ஏற்ற ஒரு பொருள். பச்சை கற்பூரம் நமக்கு பாஸ்டிவ் அதிர்வலைகளையும் ஆற்றலையும் தரக்கூடியது.
கிராம்பு மகாலட்சுமி கடவுளுக்கும் பெருமாள் கடவுளுக்கும் உகந்த பொருள். கணக்கே இல்லாத அளவிற்கு பாஸிட்டிவ் ஆற்றலை நமக்கு கிராம்பு கொடுக்கும்.
இந்த பொருள்களை பரிகாரத்திற்கு பயன்படுத்தும் முறை;
ஒரு சிறிய கண்ணாடி பத்திரம் எடுத்துக் கொள்ளவும். அதில் பச்சை கற்பூரம் ஒரு துண்டை போட்டுக் கொள்ள வேண்டும். துளசி இலைகள் இரண்டையும், மூன்று கிராம்பையும் அந்த கண்ணாடி பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும்.
பிறகு இதில் ஒரு குண்டு மணியளவு தங்கம் இருந்தால் அதை இந்த கண்ணாடி பாத்திரத்தில் போட்டுக் கொள்ளவும். வீட்டில் தங்கமே இல்லை என்றாலும் இதில் தங்கத்தை போடாமல் அப்படியே இந்த கண்ணாடி பாத்திரத்தை பீரோவில் வைத்து விட வேண்டும்.
தங்கம் போட்டு இந்த கண்ணாடி பாத்திரத்தை பீரோவில் வைக்கும் பொழுது இது தங்கத்தை ஈர்க்கத் தொடங்கும். வீட்டில் தங்கம் இல்லையென்றால் தங்கம் சிறிது சிறிதாக சேரத் தொடங்கும். தங்கம் வாங்கும் யோகத்தை அடுத்தடுத்து இந்த பரிகாரம் ஏற்படுத்திக் கொடுக்கும்.
தங்கம் வைக்காமல் இந்த கண்ணாடி பாத்திரத்தை பீரோவால் வைக்கும் பொழுது உங்களுடைய குலதெய்வத்தை வேண்டி இதை வைக்க வேண்டும். இதன் பிறகு உங்களுக்கு தங்கம் சேரத் தொடங்கும். அவ்வாறு நீங்கள் வாங்கும் முதல் தங்கத்தை இந்த கண்ணாடி பாத்திரத்தில் வைக்க வேண்டும்.
இதில் சேர்க்கப்பட்டிருக்கும் துளசி இலை காய்ந்து விட்டால் காய்ந்த துளசி இலையை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புதிதாக இரண்டு இலைகளை இதில் வைக்கலாம். அது போல பச்சை கற்பூரம் சில நாட்களில் கரையத் தொடங்கும். அப்போது மீண்டும் இதில் பச்சை கற்பூரத்தை சேர்க்க வேண்டும்.
இந்த பரிகாரத்தை முழு பௌர்ணமி அன்று செய்யலாம். அல்லது வளர்பிறை நாட்களில் வெள்ளிக் கிழமை இந்த பரிகாரத்தை செய்யலாம்.
நீங்கள் பெருமாள் கோவிலுக்கு செல்லும் பொழுது அங்கு கொடுக்கப்படும் தீர்த்த தண்ணீரை பீரோவில் தெளிக்க வேண்டும். அல்லது அந்த தீர்த்த தண்ணீரை ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி பீரோவில் வைக்க வேண்டும். அவ்வாறு வைத்தால் ஒருவில பாசிஸ்டிவ் ஆற்றல் உருவாகும். இந்த ஆற்றல் நம் வீட்டில் பணமும் தங்கமும் சேர்வதற்கான யோகத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.