சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் புது வீடியோ

0
89

சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் புது வீடியோ

சர்ச்சைக்கு பெயர் பெற்ற சாமியாரான நித்யானந்தா சமீபத்தில் தினம் தினம் ஒரு காணொலியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

இதுநாள் வரை அவர் எங்கே உள்ளார் என்ற தகவல் யாருக்கும் கிடைக்கப் பெறவில்லை.இருந்த போதிலும் நித்யானந்தா வீடியோ மூலம் மக்களிடம் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறர்.

சிவராத்திரிக்காக அவர் வெளியிட்ட காணொலியில் கூறிய “லெஜன்ட்ஸ் செலிபிரேட் சிவராத்திரி” என்ற வாசகம் மிகவும் பிரபலமாக இனையத்தில் வலம்வந்தது.

இதனை தொடர்ந்து தற்போது ஒரு காணொலி பதிவை வெளியிட்டுள்ளார்.அதில் கிருஸ்துவர்களுக்கு எப்படி ஒரு வாட்டிகன் நகரம் உள்ளதோ அதுபோல இந்துக்களுக்கு கைலாசத்தை அமைக்க வேண்டும் என எண்ணினேன்.

கைலாசத்தை அமைக்கும் பணிகள் முடிவடைந்து தற்போது சில நாடுகளுடன் தூதரக உறவுகளுக்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.ஆனால் கைலாசதேசம் எங்கே உள்ளது என்பதை பற்றி யாருக்கும் இப்போது தெரிவிக்கப் போவதில்லை.

நான் இத்துடன் தமிழ்நாட்டிற்கு வரப்போவது இல்லை.என்னுடைய சொத்துகள் எனக்கு பிறகு யார் அனுபவிக்க வேண்டும் என்பது பற்றி உயில் எழுதிவிட்டேன் என்றும் அந்த காணொலியில் நித்யாணந்தா தெரிவித்துள்ளார்.

author avatar
Parthipan K