நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை எப்போது?

0
90

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை எப்போது?

கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த 23 வயது மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிங்கப்பூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் ஒரு சில நாட்களில் அவர் உயிர் இழந்தார்

நிர்பயாவின் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் மாணவர்கள் கொந்தளித்து வீதியில் இறங்கி போராடத் தொடங்கினார்கள். இதனையடுத்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்ஷய் தாக்குர் மற்றும் ஒரு இளம் குற்றவாளி என 6 பேர் கைது செய்யப்பட்டனர்

இவர்கள் அனைவரும் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்த நிலையில் ராம்சிங் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் இளம் குற்றவாளி 3 ஆண்டு சிறை தண்டனைக்கு பின் விடுதலையானார். இதனை அடுத்து மீதி உள்ள முகேஷ் சிங், வினய் சர்மா, அக்ஷய் தாக்குர், பவன் குப்தா ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது

இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் உறுதி செய்ததை அடுத்து இந்த நால்வருக்கும் எப்போது வேண்டுமானாலும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் குற்றவாளிகள் நால்வரையும் விரைவில் தூக்கில் போட சிறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்

குடியரசுத் தலைவருக்கு கருணை மனு விண்ணப்பம் செய்வதற்கு இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே காலக் கெடு உள்ளது. இந்தக் காலக்கெடுவுக்கு முன் நான்கு பேர்களும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை விண்ணப்பம் செய்யாவிட்டால் அடுத்த ஒரு சில நாட்களில் நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்

ஒருவேளை குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி, தங்கள் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று அவர்கள் மனு விண்ணப்பித்தால் மட்டுமே தூக்கு தண்டனையை நிறைவேற்ற நாள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
CineDesk