10 நாள் இதை சாப்பிட்டு பாருங்க:? ஆயுசுக்கும் கண்ணாடியே போட மாட்டீங்க!

0
76

தற்போதைய காலகட்டத்தில் சிறு வயது குழந்தைகள் மொபைல் போன்,லேப்டாப் போன்ற கண்களை பாதிக்கக்கூடிய மின்னணு கருவிகளை அதிகமாக உபயோகிக்கப்படுகின்றன.இதுமட்டுமின்றி தற்போது சிறு குழந்தைகளுக்கு பாட சுமையினால் மன அழுத்தம் ஏற்பட்டு தூக்கமின்மைக்கு காரணமாகிறது இதனால் கண் கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.கண் பிரச்சனைகளை சரிசெய்ய இதனை பின்பற்றி பாருங்கள்.

கொய்யா இலை
இந்தக் கொய்யா பழம் மற்றும் கொய்யா இலையில் ஏராளமான விட்டமின் மினரல்ஸ் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன,குறிப்பாக விட்டமின் C,B,B12,B4,D,சிங்க் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.இதனுடைய மருத்துவ குணங்கள் ஏராளமானவை.தற்போது இதில் கொய்யா இலையை பயன்படுத்தி கண் குறைபாட்டை எவ்வாறு சரி செய்வது என்பதனை பார்ப்போம்.

வழிமுறை 1


கொழுந்து கொய்யா இலைகளை ஒரு மாதம் தினமும் காலை 3 இலைகளை சாப்பிட்டு வந்தால் உங்கள் வாழ்க்கையில் கண்ணாடி அணிய வேண்டிய அவசியம் இருக்காது.

வழிமுறை 2


கொளுந்தான ஆறு கொய்யா இலையை பறித்து அதை நன்றாக அலசி கொண்டு பின்பு, அதனை இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்.இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளராக வரும் வரை கொதிக்க வைத்து அதில் சிறிதளவு தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கண் சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளும் தீரும்.

வழிமுறை 3


தேவையான பொருட்கள்

வல்லாரை கீரை பொடி – 1 தேக்கரண்டி
தேன் – 1 தேக்கரண்டி
மோர் அல்லது பால் – 1 டம்ளர்

தேனுடன் இந்த வல்லாரைக்கீரை பொடியை நன்றாக கலக்கி காய்ச்சிய பாலில் அல்லது மோரில் கலந்து தினமும் 1 முறை 10 நாட்கள் தொடர்ந்து குடிக்கவேண்டும்.
10 நாட்கள் கழித்து மாதம் 2 முறை குடித்து வர கண் பார்வையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

வல்லாரைக் கீரை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.சில இடங்களில் தண்ணீர் அதிகம் பாயும் இடங்களில் தானாகவே முளைத்திருக்கும்.

author avatar
Pavithra