திருமணமான சிறிது நாட்களிலேயே கணவனை தவிக்க விட்டு காதலனுடன் மனைவி செய்த அசிங்கம்?

0
64

திருமணமான சிறிது நாட்களிலேயே கணவனை தவிக்க விட்டு காதலனுடன் மனைவி செய்த அசிங்கம்?

திருமணமான 20 நாட்களில், கணவரை கைவிட்டு காதலனுடன் இளம்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் இவருக்கும், பரசேரி என்ற பகுதியை சேர்ந்த ராஜஸ்ரீ என்பவருக்கும், கடந்த மாதம் 24-ம் தேதி திருமணம் நடைபெற்றது. 

புதுமண தம்பதியர் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தனர், திருமண விடுமுறை முடிந்த வேல்முருகன் டிசம்பர் 16-ம் தேதி வேல்முருகன் தன் அலுவலகத்திற்கு சென்ற பின் பணி முடிந்து வீட்டுக்கு வந்த வேல்முருகன், மனைவி வீட்டில் இல்லாததைகண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து மனைவியின் பெற்றோரை தொடர்பு கொண்டு பேசியதில், ராஜஸ்ரீ அங்கும் செல்லவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். 

மேலும், ராஜஸ்ரீ தாய் வீட்டில் கொடுத்த 70 சவரன் நகையுடன் ராஜஸ்ரீ மாயமானது தெரியவந்தது, இதனையடுத்து வேல்முருகன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் ராஜஸ்ரீ பள்ளி பருவத்தில் இருந்தே பக்கத்துவீட்டை சேர்ந்த சந்தோஷ் என்ற நபரை காதலித்து வந்துள்ளார், திருமணமான இருபதே நாளில் கணவனை விட்டு, காதலனுடன் பெங்களூருக்கு ஓட்டம் பிடித்ததும் தெரியவந்தது. 

ஆனால்,பலரிடம் கடன் வாங்கியுள்ள சந்தோஷ், பணத்திற்காக தனது மகளை கடத்தி சென்றுள்ளதாக, அவரது தந்தை ராஜேந்திர பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார்

author avatar
CineDesk