நியுசிலாந்து வீரர் பிலிப்ஸ் அபார சதம்… இலங்கைக்கு 168 ரன்கள் இலக்கு!

0
105

நியுசிலாந்து வீரர் பிலிப்ஸ் அபார சதம்… இலங்கைக்கு 168 ரன்கள் இலக்கு!

உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் நியுசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதின.

உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 லீக் சுற்றுகள் இப்போது நடந்து வருகின்றன. இதில் சில போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டும் கைவிடப்பட்டும் ரசிகர்களை ஏமாற்றினர். இதற்கிடையில் இன்று நியுசிலாந்து மற்றும் இலங்கை ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியுசிலாந்து அணி முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய நியுசிலாந்து அணி தொடக்க வீரர்கள் மூன்று பேர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

அதன் பின்னர் வந்த பிலிப்ஸ் சிறப்பாக விளையாட, அவருக்கு பக்கபலமாக விளையாடிய மிட்செல் 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஒரு பக்கம் அதிரடியாக விளையாடிய க்ளென் பிலிப்ஸ் 64 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அணியின் மொத்த ஸ்கோரில் அவர் மட்டும் 70 சதவீதத்துக்கும் மேலாக சேர்த்தார்.

இலங்கை அணி சார்பாக ரஜிதா அதிகபட்சமாக 2 விக்கெட்களை வீழ்த்தினார். தீக்‌ஷனா, சில்வா, ஹசரங்கா மற்றும் லகிரு குமாரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர்.

அவரின் விக்கெட்டுக்குப் பிறகு தொடர்ந்து ஆடிய நியுசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்துள்ளது. இலங்கை அணி 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு தங்கள் இன்னிங்ஸை தொடங்க உள்ளது.