பிரேசிலில் கொரோனா-வை கட்டுபடுத்த புதியவகை டெக்னிக்! இதை கடவுளின் கைகள் என்றுக் கூறுககின்றனர்!

0
86
new-technique-to-control-corona-in-brazil-they-say-this-is-the-hands-of-god
new-technique-to-control-corona-in-brazil-they-say-this-is-the-hands-of-god

பிரேசிலில் கொரோனா-வை கட்டுபடுத்த புதியவகை டெக்னிக்! இதை கடவுளின் கைகள் என்றுக் கூறுககின்றனர்!

கொரோனா தொற்றானது உலக நாடுகள் அனைத்திலும் அதி வேகமாக தற்போதும் பரவி வரத்தான் செய்கிறது.முதலில் இத்தொற்று சீனாவில் ஆரம்பித்து அப்படியே அனைத்து நாடுகளுக்கு தொற்றி வந்தது.அந்தவகையில் தற்போது முதல் இடத்தில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்த நாடக அமெரிக்கா உள்ளது.அதனையடுத்து இரண்டாவதாக பிரேசில் உள்ளது.தொற்று அதிகம் உள்ள நாடக மூன்றாவது இடத்தில் நமது இந்தியா உள்ளது.

அந்தவகையில் தற்போதும் கொரோனா தொற்றிலிருந்து மீளாத நாடக பிரேசில் உள்ளது.நாள் ஒன்றுக்கு அங்கு 4000 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் உயிரிழக்கின்றனர்.அந்தவகையில் தினம் 100 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்றானது உறுதியாகி வருகிறது. அவ்வாறு கொரோனா தொற்று உறுதியானவர்களை மருத்துவமனைகளில் தனிமை படுத்தப்படுவர்.அனைத்து கொரோனா தொற்று பாதித்தவர்களையும் தொட்டு சிகிச்சை அளிப்பது என்பது சாத்தியம் அல்லாதது.ஏனென்றால் கொரோனா பாதித்தவர்களை தொட்டு சிகிச்சை அளிப்பதால் அவர்களுக்கும் தொற்றானது அதிக விரைவிலேயே பரவ வாய்புகள் உள்ளது.

அதுமட்டுமின்றி தனிமை படுத்தப்பட்டோற்கும் மனநிறைவாக இருப்பதற்காக புதிய யுக்தியை பிரேசில் நாடு உபயோகம் செய்துள்ளனர்.ஒருமுறை உபயோகம் செய்து தூக்கி போடும் கையுறையை எடுத்து அதனுள் வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்பி இருபக்கமும் முடுச்சுகள் போட்டு இரு கைகள் கோர்ப்பது செய்து விடுகின்றனர்.அந்த தண்ணீர் கையுறையின் நடுவில் கொரோனாவால் பாதித்தவர்களின் கையை எடுத்து வைத்து விடுகின்றனர்.இதுபோல் செய்வதால் கொரோனா பாதித்த நபருக்கு நம்முடன் யாரோ ஆறுதலாக கை கோர்த்து உள்ளதுபோல தோன்றுகிறது.அவர்களின் சிறிதளவு மனக்கவலை குறைகிறது.ஒரு நபர் இதனை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் இது கடவுளின் கைகள் என பதிவிட்டுளர்.தற்போது அது சமூக வலைத்தளங்களில் பெருமளவு பிரபலமாகி வருகிறது.