கொரோனா பாதிப்பிற்கான புதிய அறிகுறிகள்! அமெரிக்க ஆய்வு நிறுவனம் கண்டுபிடிப்பு

0
68
New Symptoms Of Corona Identified by America-News4 Tamil Online Tamil News
New Symptoms Of Corona Identified by America-News4 Tamil Online Tamil News

கொரோனா பாதிப்பிற்கான புதிய அறிகுறிகள்! அமெரிக்க ஆய்வு நிறுவனம் கண்டுபிடிப்பு

ஆரம்பத்தில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும்பாலான உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியில் பல்வேறு உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. மேலும் இந்த வைரஸ் தொடர்பான ஆய்வுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ஆய்விலும் கொரோனா வைரஸ் பற்றி புதியதான பல தகவல்கள் வெளியாகின்றன. 
அந்த வகையில், தற்போது அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ் தொற்று இருப்பதற்கான புதிய அறிகுறிகள் சிலவற்றை கண்டறிந்து தெரிவித்துள்ளது.

வைரஸ் பரிசோதனை

தற்போதைய சூழ்நிலையில் கொரோனா வைரஸ் இருப்பவர்களுக்கு லேசானது முதல் தீவிரமான அறிகுறிகள் தென்படுகின்றன. கொரோனா வைரஸ் தாக்கிய பின்னர் இந்த அறிகுறிகள் 2 முதல் 14 நாட்களுக்குப் பின்னர் வெளியில் தெரிய ஆரம்பிக்கும் என்று சிடிசி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி கண்டுபிடித்த அறிகுறிகளாவன.

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி கண்டுபிடித்த புதிய அறிகுறிகள்:
1. காரணமேயில்லாமல் உடல் குளிர்வது போன்று உணர்தல் 2. காரணமேயில்லாமல் உடல் குளிர்ச்சியுடன் நடுங்க ஆரம்பித்தல் 3. கடுமையான வேலை செய்யாத நிலையிலும் உடலில் தசை வலி ஏற்படுதல் 4. திடீரென ஏற்படும் தலைவலி 5. சுவை மற்றும் வாசனை உணர்வு குறைவது.

தற்போது அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி வெளியிட்ட இந்த அறிகுறிகள் எதுவும், உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட பட்டியலில் இடம் பெறவில்லை. இதற்கு முன் உலக சுகாதார அமைப்பானது, காய்ச்சல், வறட்டு இருமல், உடல் சோர்வு, உடல் வலி, மூக்கடைப்பு, வயிற்றுப் போக்கு, தொண்டை வறட்சி உள்ளிட்டவற்றை கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஆகும் என்று குறிப்பிட்டிருந்தது.

பொதுவாக தற்போது வரை கொரோனா வைரஸ் இருந்தால், காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் இருக்குமென்று சிடிசி மற்றும் உலக சுகாதார அமைப்பு சொல்கிறது. 

அதே நேரத்தில் ஒருவருக்கு கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் இந்த அறிகுறிகள் மட்டும் தான் வரும் என்று கூற முடியாது எனவும், சம்பந்தப்பட்ட நபர்கள் மருத்துவமனையை அணுகி இதுகுறித்து முறையான தெளிவு பெற வேண்டும் என்றும் சிடிசி விளக்கியுள்ளது.