இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கீப்பர் யார் தெரியுமா?

0
149

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கீப்பர் யார் தெரியுமா?

நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரையிறுதியில் நியூஸிலாந்து அணியுடன் நடைபெற்ற ஆட்டத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது.

இங்கிலாந்தும் நியூஸிலாந்தும் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன. நடைபெற்ற உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் பல தடைகளை தாண்டி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக ஐசிசியால் அறிவிக்கப்பட்டது.

இந்திய அணி லீக் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி புள்ளி பட்டியலில் முதன்மை இடத்தை பிடித்திருந்தாலும் அரையிறுதியில் நியூஸிலாந்துடன் விளையாடி தோல்வி அடைந்தது. முதலில் விளையாடிய நியூஸிலாந்து 239 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் அடுத்த நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது பின்பு விளையாடிய இந்தியா முதல் 3 விக்கெட்களை மளமளவென விட்டு கொடுத்து அதிர்ச்சி அடைய வைத்தது.

பின்பு சீரான இடை வெளியில் தொடர்ந்து அடுத்தடுத்த விக்கெட்களை பறிகொடுத்தது. அடுத்து தோனி ஜடேஜா இணை விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. பின்பு ஜடேஜா அவுட் ஆகிய பின் தோனியும் 50 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். இதனால் எதிர்பாராத விதமாக இந்திய அணி தோல்வியை தழுவியது.

இதை அடுத்து தோனியின் ஆட்டம் பற்றி பல்வேறு வகையான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. இதையும் பொருட்படுத்தாமல் அவரது ரசிகர்கள் தோனியின் ஆட்டத்தை கொண்டாடி வருகின்றனர்.

இதற்கு இடையில் இந்த உலக கோப்பையில் தோனி ஓய்வு பெறுவதாக பலர் கூறினார்கள். இதனால் அடுத்து யார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் என்பதில் குழப்பம் நிலவியது.

இதை அடுத்து பிபிசிஐ வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.அதாவது இனி வரும் ஆட்டங்களில் விக்கெட் கீப்பர் தேர்வுகளில் தோனி முதன்மை இடத்தில் இருக்க மாட்டார். ரிசப் பண்ட் முதன்மை இடத்தில் இருப்பார் என தெரிவித்தார்.

மேலும் தோனி தனது ஓய்வினை அவரே முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்றும் அறிவித்தார்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

author avatar
Parthipan K