கொரோனாவுக்காக சிறப்பு மருந்தை உருவாக்கியுள்ள இந்திய ஹோமியோபதி மருத்துவர்!

0
74

கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்ள எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மருந்துகளை எடுக்க மத்திய அரசும் மாநில அரசும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

சித்த மருத்துவத்தில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்யும் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் உள்ளிட்டவற்றைத் தமிழக அரசே மக்களுக்கு வீடுதோறும் சென்று வழங்கி வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா தொற்று பரவலை தடுக்கவும், சிகிச்சை வழங்கவும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான ஆர்செனிகம் ஆல்பம் – 30 (Arsenicum Album) என்ற ஹோமியோபதி மருந்தை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு, வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் எனவும், ஒரு மாதத்திற்குப் பின் இதே முறையில் மருந்து சாப்பிட வேண்டும் எனவும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இந்தப் பரிந்துரையை ஏற்று தமிழக அரசு, இந்த மருந்தை பயன்படுத்தும்படி, கடந்த ஏப்ரல் 23-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதை பயன்படுத்தியவர்களுக்கு நல்ல பலனை தருவதாக ஹோமியோபதி மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மும்பையை சேர்ந்த ஹோமியோபதி மருத்துவரான ஜவகர் ஷா, 100 ஹோமியோபதி மருத்துவர்களை ஒன்றிணைத்து கொரோனா வராமால் தடுக்க உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் வகையில் சிறப்பு மருந்தை கண்டுபிடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்,

ஹோமியோபதி துறையில் சுமார் 40 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஜவகர் ஷா நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இந்த மருந்தை பயன்படுத்தினால் கொரோனா மட்டுமல்ல மற்ற எந்த நோய் பாதிப்பும் ஏற்படாத என கூறுகிறார். வெறும் ஆறு நாட்கள் இதனை பயன்படுத்தினால் போதும் என கூறப்படுகிறது. இந்த மருந்திற்கு CK1, CK2 என பெயரிடப்பட்டுள்ளது.

ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரையை பின்பற்றி உருவாக்கப்பட்டுள்ள இந்த மருந்தை மும்பையை சேர்ந்த 22000 காவல்துறையினருக்கும், 4000 தீயனைப்பு துறை பணியாளர்களுக்கும், மும்பையில் கொரோனா தொற்று அதிகமிருக்கும் தாராவியை சேர்ந்த 1 லட்சம் பொதுமக்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K