யார் செத்தா நமக்கு என்னனு போட்டான் பாரு கொரோனா வைரஸ் புடவை : இதல்லவா புத்திசாலிதனம்!

0
71

யார் செத்தா நமக்கு என்னனு போட்டான் பாரு கொரோனா வைரஸ் புடவை : இதல்லவா புத்திசாலிதனம்!

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்குப் பரவி அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.

உலகம் முழுவதும் பரவலாக 130000 மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக தெரிகிறது. இதுவரை 4500 நோயாளிகள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

இதுவரை இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. இந்த நோய் பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாக பரவிவருகிறது. அந்த புகைப்படத்தில் கொரோனா வைரஸ் கிருமியின் மாதிரியை அச்சிடப்பட்ட புடவை ஒன்று பதிவாகி உள்ளது.

<em><strong>கொரோனா வைரஸ் புடவை<strong><em>

இதற்குப் பெயர் கொரோனா வைரஸ் புடவை என்று நெட்டிசன்கள் வைரலாக பரப்பி வருகின்றனர்.

author avatar
Parthipan K