இந்திய பகுதியை தங்கள் நாட்டுடன் இனைத்து வரைபடம் வெளியிட்ட நேபாளம்!

0
60

இந்தியாவின் உத்தராகண்ட் எல்லையில் உள்ள சிறிய நாடு நேபாள். மிக சிறிய நாடான நேபாளம் சமீபத்தில் வெளியிட்ட தங்கள் நாட்டின் வரைபடத்தில் இந்தியாவுக்கு சொந்தமான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகிய பகுதிகளை இணைத்து தங்களது பகுதி என்று வெளியிட்டது.

மாற்றம் செய்த இந்த நாட்டு வரைபடத்து ஒப்புதல் அளிக்க நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர தீர்மானித்திருந்தனர். இதற்கு இந்தியா தரப்பிலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போதைக்கு இதனை நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்து கொள்ள பொவதில்லை என அறிவித்துள்ள நேபாள பிரதமர் கே.பி. ஒலி, எதிர்க்கட்சிகளின் ஒப்புதலைப் பெற்ற பின்னர்தான் இதுகுறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் உருவானதன் பின்னணி என்ன?

உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள லிபுலேக் – தர்சுலா இடையிலான 80 கிலோ மீட்டர் தொலைவிலான சாலையை கடந்த மே 8 ம் தேதி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் திறந்து வைத்தார். இந்த நிகழ்வு நடைபெற்றவுடன் நேபாளத்துக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாட்ராவுக்கு நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் குமார் கியாவலி எதிர்ப்பு தெரிவித்து சம்மன் அனுப்பி இருந்தார்.

கலாபானி இந்தியாவிற்க்கு சொந்தமான பகுதி. ஆனால் அதனை நேபாளம் தன்னுடையது என கூறி வருகிறது. இந்தப் பகுதி சீனாவின் திபெத் பகுதியை ஒட்டி உள்ளது. இந்த வழியை வர்த்தகத்திற்கு சீனா பயன்படுத்தி வருகிறது. இந்த வழி மூலம் கைலாஷ், மானசரோவர் செல்வதற்கும் யாத்திரிகர்கள் பயன்படுத்துகின்றனர். கைலாஷ், மானசரோவர் செல்லவே இந்த சாலையை இந்தியா அமைத்துள்ளது.

இதனால் தான் தற்போது தேவையில்லாமல் நேபளம் இந்தியாவிடம் வாலாட்டி வருகிறது.

author avatar
Parthipan K